என் காதல்

25 Apr 2010

முகப்பு > வலைப்பதிவுகள்

இறந்தே பிறந்த
குழந்தையை போல்
முடிந்தே தொடங்கியது
என் காதல்!

காதலின் மறுப்பும்
குழந்தையின் இழப்பும்
வாழ்நாள் முழுதும்
தொடரும் நினைப்பும்

புயலென வந்தாய்
வேருடன் சாய்த்தாய்
துளிர்க்கும் நினைப்புடன்
உயிருடன் நான்

மீனின் கண்ணீர்
கடலுக்கு தெரியுமா
ஆணின் கண்ணீர்
மனதுக்கு புரியுமா?

உயிரை பறித்தால்
சிரிப்புடன் மரிப்பேன்
நட்பை பறித்தால்
நான் என்ன செய்வேன்?

அருவியின் உச்சியில் பரிசலாய்
சரியும் பனியில் சிறுமுயலாய்
எரியும் குடிசையில் குருடனாய்
சிங்கள தேசத்தில் தமிழனாய்
நான்!

எதிர்மறை எண்ணங்கள்
மனதினில் வந்ததில்லை
அவை தவிர இப்போது
வேறொன்றும் தோன்றவில்லை

சித்தம் கலங்கி
முற்றும் குழம்பி
தெருவினில் அலையுமுன்
கொன்றுவிடுங்கள் என்னை!

கருணைக்கொலை புண்ணியம்!

முகப்பு > வலைப்பதிவுகள்

இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach

copyleft @ 2009.