<rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" version="2.0">
	<channel>
		<title><![CDATA[பேரன்பும் பெருங்கோபமும்]]></title>
		<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog]]></link>
		<description><![CDATA[]]></description>
		<copyright><![CDATA[copyleft @ 2009.]]></copyright>
		<category>Blogs</category>
		<language>ta</language>
		<pubDate>Wed, 06 May 2026 21:26:25 +0530</pubDate>
		<lastBuildDate>Wed, 06 May 2026 21:26:25 +0530</lastBuildDate>
		<atom:link href="https://www.premkumarmasilamani.com/tamil/blog/feed.xml" rel="self" type="application/rss+xml" />
		<docs>https://www.rssboard.org/rss-specification</docs>
		<generator>Jekyll Liquid Template in Github</generator>
		<managingEditor><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></managingEditor>
		<webMaster><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></webMaster>

		
		

		
			<item>
				<title><![CDATA[மதிகெட்ட மானிடர்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/madhiketta-manidar-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>இனங்கண்டு உறவாடி<br />
குலங்கெடுக்க புறம்பேசும் <br />
மதிகெட்ட மானிடருள் - எனை<br />
நலங்கெட எறிந்ததேன்?</p>

<p>சொல்லடி சிவசக்தி!</p>

<p>மெய்வருடும் உறவுகளில்<br />
பொய்யொழுகும் உறவுகளை<br />
பகலிரவாய் பகுத்தறிய - என்<br />
நுதலதின் ஒளியெங்கே?</p>

<p>சொல்லடி சிவசக்தி!</p>

<p>நெல்லென நினைத்த<br />
புல்லினப் பிழைக்கு<br />
மழையென்ன செய்யும்?</p>

<p>தீதென்றறிந்தும்<br />
திளைத்ததிலுழலும்<br />
மனமெங்கு உய்யும்?</p>

<p>சொல்லடி சிவசக்தி!</p>

<hr />

<p><strong>பொருள் விளக்கம்:</strong></p>
<ul>
  <li><strong>இனங்கண்டு</strong> - இனம் + கண்டு. தங்களுக்கு ஆதாயம் தரக்கூடியவர்களை தேடிக் கண்டுபிடித்து.</li>
  <li><strong>குலங்கெடுக்க</strong> - குலம் + கெடுக்க. பெயர், மரியாதை கெட்டு போகும்படி.</li>
  <li><strong>புறம்பேசும்</strong> - ஒருவர் முன்னிலையில் புகழ்ந்து பேசிவிட்டு, அவர் இல்லாதபோது அவரைப் பற்றி மற்றவர்களிடம் அவதூறாகவோ அல்லது இழிவாகவோ பேசுவது.</li>
  <li><strong>மெய்வருடும்</strong> - மெய் + வருடும். மெய் என்பது உண்மை. உண்மையான உறவுகள்.</li>
  <li><strong>பொய்யொழுகும்</strong> - பொய் + ஒழுகும். பொய்கள் நிறைந்து வழியும் உறவுகள்.</li>
  <li><strong>பகுத்தறிய</strong> - பகுத்து + அறிய. எது நல்லது, எது கெட்டது எனத் தெரிந்துகொள்ள.</li>
  <li><strong>நுதலதின்</strong> - நுதல் + அதின். நுதல் என்பது நெற்றி.</li>
  <li><strong>ஒளியெங்கே</strong> - ஒளி + எங்கே. ஒளி என்பது பார்வை. இங்கே நெற்றிக்கண்ணை குறிக்கிறது.</li>
  <li><strong>புல்லினம்</strong> - புல் + இனம். நெற்பயிரோடு வளரும் தேவையற்ற களைகள்.</li>
  <li><strong>தீதென்றறிந்தும்</strong> - தீது + என்று + அறிந்தும். கெட்டது என்று தெரிந்தும்.</li>
  <li><strong>திளைத்ததிலுழலும்</strong> - திளைத்து + அதில் + உழலும்; அதிலேயே மூழ்கித் கிடப்பது.</li>
  <li><strong>உய்யும்</strong> - உயர்வடையும்.</li>
</ul>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 13 Feb 2026 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/madhiketta-manidar-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[என் கர்வம்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/en-garvam-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>என் மொழி<br />
என் காதல்<br />
என் கவிதை<br />
என் கர்வம்</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Tue, 27 Jan 2026 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/en-garvam-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[என்னோடு நானிருந்தால்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/ennodu-naanirunthaal-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>அடர்ந்திருளும் காட்டினிலும்<br />
மலைமுகட்டு மேட்டினிலும்<br />
வாசந்தீரா சோலையிலும்<br />
மணலுருகும் பாலையிலும்</p>

<p>ஏதுமின்றி நிறைந்திருப்பேன்<br />
என்னோடு நானிருந்தால் !</p>

<hr />

<p><strong>பொருள் விளக்கம்:</strong></p>
<ul>
  <li><strong>அடர்ந்திருளும்</strong> - அடர்ந்து + இருளும். அடர்ந்த, இருள் சூழ்ந்த.</li>
  <li><strong>வாசந்தீரா</strong> - வாசம் + தீரா. எப்போதும் நறுமணம் குறையாத.</li>
  <li><strong>மணலுருகும்</strong> - மணல் + உருகும். மணலே உருகும் அளவுக்குக் கடுமையான வெயில்.</li>
</ul>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 18 Jan 2026 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/ennodu-naanirunthaal-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[ஓங்காரமாகுவேன்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/ongaaramaguven-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>செவ்வானில் சிறகடித்து<br />
விண்மீனில் தடம்பதித்து<br />
ஒய்யார ஓலமிட்டு<br />
ஓங்காரமாகுவேன் !</p>

<hr />

<p><strong>பொருள் விளக்கம்:</strong></p>
<ul>
  <li><strong>ஒய்யாரம்</strong> - அழகு அல்லது கம்பீரம்.</li>
  <li><strong>ஓலமிட்டு</strong> - ஓலம் + இட்டு. உரக்கச் சத்தமிட்டு.</li>
  <li><strong>ஓங்காரமாகுவேன்</strong> - ஓங்காரம் + ஆகுவேன். ஓங்காரம் என்பது பிரபஞ்சத்தின் முதல் ஒலி.</li>
</ul>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sat, 17 Jan 2026 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/ongaaramaguven-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[தேநீர்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/theneer-kavidhai/]]></link>
				<description><![CDATA[<p>நீ<br />
நான்<br />
தேநீர்<br />
காதல்</p>

<p>உயிர் தொட்ட வாசம்<br />
இதழ் இட்ட முத்தம்<br />
அரவணைத்த விரல்கள்<br />
கிறங்கி போன இமைகள்</p>

<p>இந்த குளுரு, மழை, நீ, ராஜா<br />
இது போதும்டா எனக்கு<br />
வேற எதுவுமே வேண்டாம்</p>

<p>ம்ம்ம்…</p>

<p>விலகிச்சென்ற<br />
நாள்தொட்டு<br />
விடைதெரியா<br />
விரக்தியில்</p>

<p>தேநீர் தீர்ந்த கோப்பை !</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 16 Jan 2026 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/theneer-kavidhai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[காதலின் தேடலில்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/kadhalin-thedalil-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>காதலின் தேடலில் <br />
அத்தனை பூக்களும் <br />
சிவப்பு நிறமே !</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Tue, 14 Oct 2025 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/kadhalin-thedalil-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[பவளமல்லி]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/pavalamalli-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>பவளமல்லி பூத்திருக்கு <br />
பாடுங்குயில் காத்திருக்கு <br />
தேவியவள் தேகந்தொட <br />
இளவெயிலும் வேர்த்திருக்கு</p>

<p>இரவொழிந்த காலையிலே <br />
கண்விழிக்கும் வேளையிலே <br />
தெம்மாங்கு பாடிக்கொண்டே <br />
தோகை விரிக்கும் பூமயிலே</p>

<p>இடையர்க்குல இளமகளே <br />
இடைசிறுத்த திருமகளே <br />
நடைபழகிய நாள்தொட்டு <br />
குணம் மாறா குலமகளே</p>

<p>குளநண்டு நடனமென்று <br />
குழலதிலே விரல்களாட <br />
வெண்காந்தள் பூக்களென்று <br />
செந்தேனை வண்டு தேட</p>

<p>மழைத்துளியே மணியாடை <br />
நீராட்ட ஒருவோடை <br />
துகிலுரித்த சிறுபேடை <br />
தேன்தெறித்த புதுவாடை</p>

<p>சூதறியா செவ்விதழில் <br />
தீதறியா பொன்சிரிப்பில் <br />
களங்கண்ட காவலனும் <br />
கள்வனாக மாறிப்போக</p>

<p>நானோ…</p>

<p>தீயருகே தவித்திருந்தேன் <br />
துணையின்றி தனித்திருந்தேன் <br />
காலனவன் கால்கள் பற்றி <br />
காலமுடிய காத்திருந்தேன்</p>

<p>கண்ணெதிரே தோன்றினாய் <br />
காதல்கொள்ள ஏங்கினாய் <br />
வார்த்தையேதும் இல்லாமலே <br />
வாழ்வின்மொழி பேசினாய்</p>

<p>செஞ்சாந்து நானிடவோ <br />
பூமஞ்சள் தான் தரவோ <br />
ஒவ்வாத ஓருறவில் <br />
ஒன்றாக உறைந்திடவோ</p>

<p>சொல்லடி சிவசக்தி !</p>

<hr />

<p><strong>பொருள் விளக்கம்:</strong></p>
<ul>
  <li><strong>இரவொழிந்த</strong> - இரவு + ஒழிந்த. இரவு கழிந்தபின் தொடங்கும் அதிகாலை நேரம்.</li>
  <li><strong>தெம்மாங்கு</strong> - தேன் + பாங்கு. தேனின் இனிமை போன்று இனிமையான பாடல். தமிழ்நாட்டில் பாடப்படும் நாட்டுப்புற பாட்டு வகை.</li>
  <li><strong>இடையர்க்குல</strong> - இடையர் + குலம். “இடையர்” என்பது ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்க்கும் / பராமரிக்கும் மக்களை குறிக்கிறது. முல்லை நிலத்தவர். ஏறுதழுவுதல் / சல்லிக்கட்டு, இவர்களுடைய விளையாட்டு.</li>
  <li><strong>குளநண்டு</strong> - குளம் + நண்டு. குளத்தில் வாழும் நண்டு.</li>
  <li><strong>குழலதிலே</strong> - குழல் + அதிலே. இந்த கவிதையில் புல்லாங்குழலை குறிக்கிறது. இடையர் குலத்தின் பிரசித்தமான இசைக்கருவி.</li>
  <li><strong>வெண்காந்தள்</strong> - வெண்மை + காந்தள். வெண்மையான காந்தள் மலர்கள்.</li>
  <li><strong>மணியாடை</strong> - மணி + ஆடை. மணி + ஆடை. ரத்தினக்கல், முத்து அல்லது மாணிக்கம் போன்ற கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடை. இங்கு “மணி” என்பது மழைத்துளி.</li>
  <li><strong>துகிலுரித்த</strong> - துகில் + உரித்த. துகில் என்பது ஆடை. ஆடை அணியாத என்று பொருள் கொள்க.</li>
  <li><strong>சிறுபேடை</strong> - சிறு + பேடை. சிறிய பெண் பறவை.</li>
  <li><strong>களங்கண்ட</strong> - களம் + கண்ட. பல போர்களை சந்தித்த.</li>
  <li><strong>காலனவன்</strong> - காலன் + அவன். உயிரை எடுக்கும் எமன்.</li>
  <li><strong>செஞ்சாந்து</strong> - சிவப்பு + சாந்து. சிவந்த சாந்து அல்லது குங்குமம்.</li>
  <li><strong>ஒவ்வாத</strong> - ஒத்துவராத.</li>
  <li><strong>ஓருறவில்</strong> - ஓர் + உறவில்.</li>
</ul>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Wed, 17 Sep 2025 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/pavalamalli-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[பாரியின் தேர்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/pariyin-ther-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>காவி நிறத்தவளே <br />
கண் தூங்க மறுத்தவளே <br />
என் மேனி அளந்தவளே <br />
மெய்யாக இருந்தவளே</p>

<p>போதும் போதுமென்றேன் <br />
போகாத எல்லை சென்றாய் <br />
மீண்டும் வாழ்வோமென்றேன் <br />
மனமறுத்து சிறுத்து நின்றாய்</p>

<p>காலங்கடந்தும் காதலென்றேன் <br />
தாபங்கழிந்தால் போதுமென்றாய் <br />
கோபம் மிகுந்த நேரமொன்றில் <br />
கூடுகழிந்து பறந்துசென்றாய்</p>

<p>வாழாத வாழ்விதற்கா <br />
வாகாயென் வாசல் வந்தாய்? <br />
சேராமல் போவதற்கா <br />
தீராத காதலென்றாய்?</p>

<p>புயலழித்த மரத்தடியில் <br />
கூடுதேடும் ஒருகுருவி <br />
வேயெரித்த செங்கதிரில் <br />
நிழல்தேடும் சிறுபுரவி</p>

<p>நான்…</p>

<p>பாரியின் தேர்!</p>

<hr />

<p><strong>பொருள் விளக்கம்:</strong></p>
<ul>
  <li><strong>மனமறுத்து</strong> - மனம் + அறுத்து. மனதில் விருப்பம் இல்லாமல்.</li>
  <li><strong>சிறுத்து</strong> - கூனிக்  குறுகி.</li>
  <li><strong>தாபம்</strong> - சூடு. காமமென கொள்க.</li>
  <li><strong>வாகாய்</strong> - அழகாய், ஒழுங்காய்.</li>
  <li><strong>வேயெரித்த</strong> - வேய் + எரித்த. வேய் என்பது மூங்கில். மூங்கிலை எரித்த.</li>
  <li><strong>செங்கதிர்</strong> - சூரியன்.</li>
  <li><strong>சிறுபுரவி</strong> - சிறு + புரவி. சிறிய குதிரை.</li>
</ul>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Thu, 07 Aug 2025 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/pariyin-ther-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[எழுதாத வரிகள்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/ezhuthatha-varigal-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>எனக்கே புரியாத என்னை <br />
என்னைவிட புரிந்தவள் அவள் <br />
புரிந்தபின்னும் பிரிவோமென்று <br />
பிரியும்போதும் புரியவில்லை</p>

<p>சத்தங்களின் அமைதியில் <br />
மௌனங்களின் கதறலில் <br />
கண்டுகொண்டேன் அவளை <br />
கலங்கின கண்களுடே</p>

<p>வார்த்தைகளுடன் போரிட்டு <br />
தோற்றப்பின்தான் தெரிந்தது <br />
மௌனங்கள் போதும் <br />
உனதன்பைச் சொல்ல</p>

<p>ஊரறியும் ராவண நேசம் <br />
யாரறிவார் மாதவி பாசம்? <br />
மணல்வீடென்றறிந்தும் <br />
தென்றலுடன் காதல் !</p>

<hr />

<p><strong>பொருள் விளக்கம்:</strong></p>
<ul>
  <li><strong>கண்களுடே</strong> - கண்கள் + ஊடே. கண்களின் வழியாக.</li>
  <li><strong>மணல்வீடென்றறிந்தும்</strong> - மணல்வீடு + என்று + அறிந்தும்.</li>
</ul>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 01 Aug 2025 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/ezhuthatha-varigal-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[சலனமில்லா பெருங்கூச்சல்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/salanamilla-perungoochal-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>இக்காட்டிடை பெருவெள்ளத்தில் <br />
கரையூறும் நத்தைக்கூட்டின் <br />
சலனமில்லா பெருங்கூச்சலும்,</p>

<p>இம்மானிட பெருங்காட்டில் <br />
தனிக்குருட்டு செடியின் <br />
முடிவடையா வெற்றிடமும்,</p>

<p>நீரறியா பெரும்பாலையில் <br />
மழைவேண்டும் சிறுவிதையின் <br />
நிறைவேறா நெடுந்தாகமும்,</p>

<p>கருவறையின் நிலவறையில் <br />
கண்திறவா காலமெல்லாம் <br />
செங்கதிரால் தீராயிரவும்</p>

<p>என் மனமெங்கும் தினமுழல</p>

<p>வலிக்கிறது…</p>

<p>நான் தாய் <br />
நான் குழந்தை <br />
என்னை நானே பிரசவிக்கிறேன்!</p>

<hr />

<p><strong>பொருள் விளக்கம்:</strong></p>
<ul>
  <li><strong>இக்காட்டிடை</strong> - இந்த + காடு + இடை. இந்த காட்டின் இடையில்.</li>
  <li><strong>கரையூறும்</strong> - கரை + ஊறும். ஆற்றின் கரையில் ஊர்ந்து செல்லும்.</li>
  <li><strong>நீரறியா</strong> - நீர் + அறியா. தண்ணீர் என்பதை அறிந்திராத (காணாத).</li>
  <li><strong>செங்கதிரால்</strong> - செம்மை + கதிர். சூரியன்.</li>
  <li><strong>தீராயிரவும்</strong> - தீரா + இரவும். முடிவடையாத இரவு.</li>
  <li><strong>தினமுழல</strong> - தினம் + உழல. தினமும் தவித்தல், அலைக்கழிக்கப்படுதல்.</li>
</ul>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Wed, 23 Jul 2025 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/salanamilla-perungoochal-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[நான் கடவுள்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/naan-kadavul-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>சிலர்க்கூடி தேர் இழுக்க <br />
பலர்க்காணும் கடவுள் போல் <br />
இங்கு <br />
நான் மட்டும் தேர் இழுக்க <br />
யார் காண? <br />
எதை காண? <br />
இவ்வுலகம் எனை காண, <br />
எவ்வுலகம் நான் காண?</p>

<p>முடிவிலா கேள்விகளும் <br />
பதிலிலா மௌனங்களும் <br />
தெளிவிலா ஞானங்களும் <br />
குறைவிலா மோனங்களும் <br />
எனை யாரும், <br />
கூடாதொரு தனிமையில் <br />
தேடாதொரு வெறுமையில் <br />
காணாதொரு கடவுள் தேடி <br />
பேணாதொரு வாழ்வை நாடி <br />
ஓய்ந்து வீழ்ந்து மாய்ந்து <br />
போகச்சொல்ல …</p>

<p>அன்றொரு நாள்</p>

<p>தரைவீழ்ந்த பூவின் வாசமும் <br />
பூவிழுந்த தரையின் நேசமும் <br />
ஒன்றென உணர்ந்த ஓர் தருணம் <br />
நானுமில்லை தேருமில்லை <br />
தேவையில்லை தேடலில்லை <br />
கடவுள் காண தோன்றவில்லை</p>

<p>என் தேர் <br />
என் தேவை <br />
என் தேடல் <br />
என் கடவுள்</p>

<p>நான் தேர் <br />
நான் தேவை <br />
நான் தேடல் <br />
நான் கடவுள்</p>

<hr />

<p><strong>பொருள் விளக்கம்:</strong></p>
<ul>
  <li><strong>மௌனம்</strong> - சத்தங்கள் இல்லாத நிலை. பேசாதிருத்தல். அமைதி.</li>
  <li><strong>மோனம்</strong> - சிந்தனைகள் இல்லாத நிலை. பிரபஞ்சத்தோடு ஒன்றியிருத்தல். பேரமைதி.</li>
  <li><strong>பேணாதொரு வாழ்வு</strong> - பேணாத + ஒரு + வாழ்வு. இது வரை உணராத, வாழாத ஒரு வாழ்வு.</li>
</ul>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Mon, 21 Jul 2025 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/naan-kadavul-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[96 - திரைவிமர்சனம்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/96-thirai-vimarsanam/]]></link>
				<description><![CDATA[<p>ஒவ்வொரு காட்சியும் <br />
ஒவ்வொரு இசையும் <br />
ஒவ்வொரு வசனமும் <br />
ஒவ்வொரு மௌனமும்</p>

<p>இங்கொரு <br />
முடிவுறா காதலாய் <br />
செதுக்கப்பட்டிருக்கிறது!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 20 Jun 2025 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/96-thirai-vimarsanam/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[கிடைக்குமோ?]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/kidaikumo-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>தாய்மடி தேடி அழுகின்ற <br />
பால்மணம் மறவா பாலகன் நான் <br />
உன்மடியெனக்கு ஓர் நாளேனும் <br />
கருவறையாக கிடைக்குமோ?</p>

<p>பல்லவ சிற்பியின் சிறுவுளி தவறால் <br />
சிதைந்து போன சிற்பம் நான் <br />
கல்லாய் நானும் கரையும் முன்னே <br />
கடைவிரல் ஸ்பரிசம் கிடைக்குமோ?</p>

<p>பிணிகள் மூத்த பித்தன் கனவில் <br />
உயிர்த்து வாழும் சோகம் நான் <br />
முடியுமுன்னே ஓர் முறையேனும் <br />
முத்தமொன்று கிடைக்குமோ?</p>

<p>காதலின் தலைவன் தானென நினைத்து <br />
காவியம் வடிக்கும் கவிஞன் நான் <br />
கவிதை முடியும் கடைநொடியேனும் <br />
கரிசல்பார்வை கிடைக்குமோ?</p>

<p>தேவைகளற்ற காதலை தேடும் <br />
தேன்சுவையறியா தேனி நான் <br />
தேடும்போது ஓர் முறையேனும் <br />
தேடும்காதல் கிடைக்குமோ?</p>

<p>தனிமை ஒழிக்கும் தேவதை யாரோ? <br />
தாகம் தணிக்கும் கானல் நீரோ? <br />
உண்மையறிந்தும் பொய்யை நாடும் <br />
அற்பமான மானிட வேரோ?</p>

<p>நான்!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sat, 19 Apr 2025 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/kidaikumo-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[உன் சிணுங்களில் சிதைந்தவன்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/un-sinungalil-sidhainthavan-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>சந்தனத் தமிழை <br />
சிந்திடும் இதழோ <br />
என்னுடன் பேசிடும் <br />
உன்னிரு விழியோ</p>

<p>மெல்லிசை பாடிடும் <br />
புன்னகை மலரோ <br />
கொஞ்சிடும் கூந்தலில் <br />
பூத்திடும் நிலவோ</p>

<p>தன்னிலை மறந்து <br />
தாளங்கள் தீட்டிடும் <br />
கன்னியின் விரலோ <br />
சிந்திய தூறலோ</p>

<p>கட்டிய சேலையில் <br />
கொட்டிய பூக்களும் <br />
சிட்டு நீ பாடவே <br />
மெட்டுக்கள் தேடுதோ</p>

<p>ஒற்றையில் ஆடிடும் <br />
பொட்டிடும் அழகோ <br />
கற்றனைத் தூறிய <br />
காவியக் கவியோ</p>

<p>சித்தன்ன கோயிலின் <br />
சித்திர சிலையோ <br />
சந்தங்கள் சேர்ந்திடும் <br />
முத்தமிழ் மழையோ</p>

<p>− உன் சிணுங்களில் சிதைந்தவன்</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sat, 21 Sep 2024 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/un-sinungalil-sidhainthavan-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[கிடைக்காத தருணங்கள்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/kidaikatha-tharunangal-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>ஒரு பார்வை <br />
ஒரு வார்த்தை <br />
ஒரு ஸ்பரிசம் <br />
ஒரு நிமிடம்</p>

<p>கிடைக்குமோ மீண்டும்?</p>

<p>ஈராறு ஆண்டுகள் <br />
தொலைதூர தேசங்கள் <br />
கலைந்துபோன கனவுகள் <br />
மறந்துபோன உறவுகள்</p>

<p>கிடைக்குமோ மீண்டும்?</p>

<p>நிலவுறங்கும் நேரத்திலும் <br />
நாமுறங்கி போனதில்லை <br />
நாவறண்டு போகையிலும் <br />
நாவடங்க தேவையில்லை <br />
அன்று!</p>

<p>கைத்தொடும் தூரத்தில் <br />
கவிதையாய் நீயிருந்தும் <br />
பார்க்க ஒரு வழியில்லை <br />
பேச ஒரு மொழியில்லை <br />
இன்று!</p>

<p>அயல்வீட்டு மலரென <br />
மனமுணர மறுக்குதடி <br />
கிடைக்காத தருணங்கள் <br />
உயிர்வரை எரிக்குதடி</p>

<p>ஆற்றில் மிதக்கும் <br />
இலையில் எறும்பு - நான் <br />
கரையில் பூக்கும் <br />
அருமலர் அரும்பு - நீ</p>

<p>தூரம் மட்டும் நிதர்சனம்!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sat, 20 Jul 2024 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/kidaikatha-tharunangal-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[அலை மேல் இறகு]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/alai-mel-iragu-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>உன்னுடன் பேசு <br />
நிறைய பேசு <br />
சத்தம் போட்டு பேசு <br />
கேட்பவர்களை கவனியாதே <br />
பேச்சு உனக்காக</p>

<p>பேசிக்கொண்டேயிரு <br />
வார்த்தைகள் தீரும்வரை <br />
எஞ்சிருப்பது நீ மட்டும் <br />
மௌனமாய், மோனமாய்</p>

<p>உணர்ந்துக்கொள்வாய்</p>

<p>உண்மையென ஒன்றுமில்லை <br />
உண்மையில் ஒன்றுமில்லை <br />
உணரத்தெரிந்தால் வாழ்வதெளிது <br />
அலை மேல் இறகு!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Thu, 19 Jan 2023 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/alai-mel-iragu-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[இனிதாய் விடியும் பொழுது]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/inidhai-vidiyum-pozhuthu-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>இனிதாய் விடியும் பொழுது <br />
சுகமாய் மலரும் விழிகள் <br />
அணைப்பில் உறங்கும் மனைவி <br />
அழகாய் சிணுங்கும் குழந்தை <br />
விழிக்கும் திசையில் புத்தகம் <br />
மனதை சிலிர்க்கும் கவிதை <br />
உதட்டின் ஓரம் புன்னகை</p>

<p>பனியில் குளிக்கும் பூக்கள் <br />
தென்றல் மிதக்கும் வீதி <br />
புல்லில் நடக்கும் கால்கள் <br />
பறக்க துடிக்கும் இதயம் <br />
நடந்து வியர்த்த தேகம் <br />
பரந்து விரிந்த ஏரியில் <br />
தாவி குதித்து குளியல் <br />
ஆடை இல்லா உடலும் <br />
தேவை இல்லா மனமும் <br />
கரையில் புரளும் அலையும் <br />
ஒருங்கே ஒன்றாய் இணையும் <br />
பொழுதில் விடியும் சூரியன்</p>

<p>உரக்க கூவும் சேவல் <br />
வேகமாய் கரையும் காகம் <br />
காதில் தேனாய் கருங்குயில் <br />
கீச்சுக்குரலில் சிட்டுக்குருவி <br />
தேகம் தொடும் இளவெயில் <br />
கசக்கி கட்டிய கந்தை <br />
பசுமை போர்த்திய கிராமம் <br />
கலப்பை சுமக்கும் கடவுள்கள் <br />
வாசல் தெளிக்கும் தெய்வங்கள் <br />
துள்ளி குதிக்கும் ஆடுகள் <br />
குட்டியை வருடும் மாடுகள் <br />
காலை சுற்றும் நாய்க்குட்டி <br />
காம்புக்கனவில் குழந்தைகள் <br />
சொர்க்கத்தின் வழியே நடைபயணம்</p>

<p>மூவருக்கு தோதாய் சிறுகுடில் <br />
மெதுவாய் திறக்கும் கதவு <br />
தேநீர் கோப்பையில் காதல் <br />
நெற்றியின் நடுவே சிறுமுத்தம் <br />
சிணுங்கலுடன் விழிக்கும் மனைவி <br />
ரசித்து பருகும் பார்வை <br />
அணைத்து கடந்த நிமிடங்கள் <br />
நடுவில் நுழைந்த தேவதை <br />
பிரித்து விட்டதாய் சிரிப்பு <br />
கழுத்தை சுற்றும் கைகள் <br />
தாடியை வெறுக்கும் கன்னங்கள் <br />
கொல்லைப்புறத்தில் சிறுகுளியல் <br />
கோழிக்குஞ்சுகளுடன் உரையாடல் <br />
சீருடை மாற்றிய சில்வண்டு <br />
மிதிவண்டியில் பள்ளி பயணம்</p>

<p>வாழ்க்கையை போதிக்கும் ஆசான் <br />
அறிவை துளைக்கும் கேள்விகள் <br />
சிந்திக்க தூண்டும் பதில்கள் <br />
அலைகடலென மாணவர்கள் <br />
தொடர்வண்டியாய் பாடங்கள் <br />
ஓய்வறியா வேளையிலும் <br />
தாய்மையாய் உணரும் நிமிடங்கள் <br />
மணி அடித்ததா? அணை திறந்ததா? <br />
சிட்டாய் பறக்கும் சிறுகுழந்தைகள்</p>

<p>ஆடுபுலி ஆடும் கிழவர்கள் <br />
ஊர்நியாயம் பேசும் கிழவிகள் <br />
திண்ணையில் கூடும் நண்பர்கள் <br />
கலகலக்கும் கிண்டல் பேச்சுக்கள் <br />
காரசாரமாய் அரசியல் பேச்சுக்கள் <br />
மெதுவாய் மறையும் சூரியன் <br />
குங்குமம் சூடும் வானம் <br />
கூடு திரும்பும் பறவைகள் <br />
அகல் விளக்கேற்றிய வீடுகள்</p>

<p>மனைவியின் தினச்செய்திகள் <br />
குழந்தையின் மழலை சாகசங்கள் <br />
நெல்லுச்சோறுடன் அயிரைமீன் குழம்பு <br />
மார்பில் உறங்கும் குழந்தை <br />
அருகில் வருடும் மனைவி <br />
நொடியில் மலரும் உறக்கம்</p>

<p>(இனிதாய் விடியும் பொழுது…)</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Thu, 09 Sep 2021 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/inidhai-vidiyum-pozhuthu-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[சிறகுகள் முளைக்கட்டும்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/siragugal-mulaikkattum-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>பரந்த வானில் <br />
விரிந்த சிறகில் <br />
பிறந்த கவியில் <br />
வளர்ந்த உறவில் <br />
புதைந்த நொடிகள் <br />
புதையல் என்பேன்.</p>

<p>கலைந்த கனவில் <br />
உடைந்த மனதில் <br />
சிதைந்த உலகில் <br />
தொலைந்த வழியில் <br />
மறந்த நொடிகள் <br />
மரணம் என்பேன்.</p>

<p>கோபங்கள் போதும் <br />
கொஞ்சல்கள் வேண்டும் <br />
வாதங்கள் போதும் <br />
வாஞ்சைகள் வேண்டும் <br />
மோதல்கள் போதும் <br />
மோகங்கள் வேண்டும் <br />
சோகங்கள் போதும் <br />
சொர்க்கங்கள் வேண்டும்</p>

<p>சிறகுகள் முளைக்கட்டும் <br />
சிறுவானில் சேர்ந்திருப்போம் <br />
மறுவாழ்வு உள்ளதெனில் <br />
மீண்டுமதில் மகிழ்ந்திருப்போம்.</p>

<p>வா!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Thu, 11 Jun 2020 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/siragugal-mulaikkattum-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[போதை தரும் பேதையா?]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/bothai-tharum-pethaiya-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>போதை தரும் பேதையா? <br />
பேதை தரும் போதையா? <br />
எதை தொட, எதை விட? <br />
விட்டுவிடாமல் தொடவா? <br />
தொட்டுவிடாமல் விடவா?</p>

<p>நெஞ்சமா மஞ்சமா? <br />
கொஞ்சும் விழி மிஞ்சுமா? <br />
கண்டதென்ன கொஞ்சமா? <br />
காணாதெல்லாம் நஞ்சமா?</p>

<p>ஆடித்தான் போகிறேன் <br />
அளவெடுத்த முன்னழகில் <br />
தேடித்தான் வேர்க்கிறேன் <br />
தென்படாத இடையழகில்</p>

<p>தொடத்தான் துடிக்கிறேன் <br />
தவிலொத்த பின்னழகை <br />
விடத்தான் மறுக்கிறேன் <br />
திமிரெடுத்த பேரழகை</p>

<p>பெயரென்ன, மொழியென்ன <br />
நான் வாழ்ந்த வழியென்ன? <br />
மறந்தொழிந்த பொழுதின்று <br />
புகழழிக்கும் இரவின்று!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 31 Mar 2019 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/bothai-tharum-pethaiya-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[பிரிவறியேன்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/pirivariyen-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>பால்வெளியும் அவள் மடியாய் <br />
வெண்ணிலவும் அவள் அடியாய்</p>

<p>விண்மீனும் அவள் விழியாய் <br />
செந்தேனும் அவள் மொழியாய்</p>

<p>புல்வெளியும் அவள் உடையாய் <br />
பூங்காற்றும் அவள் நடையாய்</p>

<p>கவிமொழியும் அவள் இனமாய் <br />
பனிப்பொழிவும் அவள் தனமாய்</p>

<p>செங்கதிரும் அவள் சினமாய் <br />
இளவெயிலும் அவள் குணமாய்</p>

<p>என்னுலகில் உய்த்திருக்க</p>

<p>பிரிவறியேன் பேதையே - என் <br />
குளிரிரவு கோதையே!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Tue, 01 Jan 2019 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/pirivariyen-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[மீண்டும் மலர்ந்தது]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/meendum-malarnthathu-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>முன்னிரவு நேரம் <br />
சில்லென்ற மழைச்சாரல் <br />
மெலிதான மண்வாசனை <br />
மௌனமான மரங்கள்<br />
மஞ்சள் உமிழும் விளக்குகள்</p>

<p>யாருமற்ற சாலையொன்றில் <br />
இருவருக்காய் ஒரு தேநீர் கடை</p>

<p>இதமான தேநீருடன் <br />
சுகமாக கதைகள் பேச</p>

<p>தினம் பார்த்த பூமுகம் <br />
புதிதாக பார்வை வீச</p>

<p>மிதமான குளிரிரவில் <br />
மெதுவாக மெதுவாக</p>

<p>மீண்டும் மலர்ந்தது <br />
மறந்துவிட்ட நம் காதல்!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Wed, 11 Dec 2013 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/meendum-malarnthathu-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[முதல் காதல்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/mudhal-kadhal-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>மலர்கள் பூத்தூவும் மாலையிலே <br />
எதிரில் நீ வந்தாய் சாலையிலே <br />
விழிகள் கண்மூடி திறக்குமுன்னே <br />
நீயென் வாழ்வினிலே!</p>

<p>கைகள் கோர்த்து நாம் நடப்போமே <br />
தனியாய் நான் மட்டும் பறப்பேனே <br />
மழையில் ஒன்றாக நனைவோமே <br />
குடைகள் இருந்தாலுமே!</p>

<p>என்னை அறியாமலே <br />
உயிர்க்காதல் உருவானதே <br />
அதை சொல்ல நினைத்தாலுமே <br />
என் பெண்மை தடுமாறுதே!</p>

<p>முதல் முத்தம் பதியும் நேரம் <br />
உயிர் மொத்தம் உறைந்தே போகும் <br />
விழி சத்தம் கூச்சல் போட்டும் <br />
இதழ் தேகமெங்கும் பரவும்!</p>

<p>கருவிழியில் நானிட்ட மையும் <br />
மெய்தீண்ட நீ சொன்ன பொய்யும் <br />
இடையருகில் உன் விரல் நகரும் <br />
அந்நேரம் மறந்து போகும்!</p>

<p>தேகங்கள் சேராமல் மோகங்கள் தீராது <br />
தேடல்கள் இல்லாமல் யூகங்கள் கூடாது <br />
உன் வேகம் பாராமல் என் பெண்மை ஓயாது <br />
மெய்யோடு தீ மூட்ட வா!</p>

<p>இரவென்றும் விடியாத பகலொன்றை அறியாத <br />
தனித்தீவில் நாம் மட்டும் நிலவுக்கு துணையாக <br />
உன் தோளில் நானாட, என் காதில் நீ பாட <br />
புதுகாதல் செய்வோமே வா!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 05 Feb 2012 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/mudhal-kadhal-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[பிரிவென்னும் ஒரு சொல்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/pirivennum-oru-sol-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>பிரிவென்னும் ஒரு சொல்லின், அறியாத பொருளொன்று <br />
உனை பிரிந்த ஒரு நாளில், முழுவதுமாய் புரிந்ததடி <br />
விழி பேசும் மொழி ஒன்று, சிறுதுளியாய் விழுமென்று <br />
துணை பேச நீயின்றி, தனியாக கண்டேனடி</p>

<p>நெடுநாட்கள் நான் மறந்த, நிலவோடு பேசுகிறேன் <br />
தொடுவானம் வரை பறந்த, நினைவுகளை யோசிக்கிறேன் <br />
குளிர்தென்றல் எனை தீண்ட, உன் சுவாசம் தேடுகிறேன் <br />
நள்ளிரவில் தனியாக, உன் பெயரை பாடுகிறேன்</p>

<p>விரல் வரைந்த கோலங்கள், துணி மறந்த நேரங்கள் <br />
போர்வைக்குள் இருவரும் போர் புரிந்த காலங்கள் <br />
எனை வந்து கொல்லுதடி, என்னுயிரை மெல்லுதடி <br />
தாலாட்டு முத்தமின்றி உயிர் பிரிந்து செல்லுதடி</p>

<p>பனி உறையும் நள்ளிரவும் தனிமையிலே தவிக்குதடி <br />
உன் மூச்சு வெப்பத்தில் குளிர் காய துடிக்குதடி <br />
அதிகாலை சூரியனும் மெதுவாக உதிக்குதடி <br />
நம் வீட்டு ரோஜாக்கள் மொட்டு விட மறுக்குதடி</p>

<p>சிறு உளியும் மலை பிளக்கும் <br />
சிறு பிரிவும் உயிர் பிளக்கும் <br />
பிரிவுற்று துயரடையா உறவொன்றை தந்து விடு <br />
கடல் சேர்ந்த மழை நீராய் என்னுயிரில் நின்று விடு!</p>

<p>காத்திருக்கிறேன் காதலுடன்!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Mon, 26 Dec 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/pirivennum-oru-sol-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[நெடுஞ்சாலை இரவுகள்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/nedunjalai-iravugal-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>விண்ணில் இருந்த தேவதை, மண்ணுக்கு வந்த நேரமோ <br />
கண்ணன் என் மனதினில் பூங்கோதையின் ராகமோ <br />
தன்னந்தனியே நிலவும் வானில் என்ன செய்யுமோ <br />
உன்னைப் பிரிந்த வலியில் தேய்ந்தொழிந்து போகுமோ</p>

<p>ரயில் போகும் பாதையாய் நாமிருவர் செல்ல <br />
கைகோர்க்கும் நேரத்தில் பூ மலரும் மெல்ல <br />
உயிர் திருடும் முயற்சியில் என் கண்கள் வெல்ல <br />
அதையுணர்ந்த கைகள் இடையணைத்து கொள்ள</p>

<p>கைதொடும் தூரத்தில் வெண்ணிலவு இருக்க <br />
நான்தொடும் நேரத்தில் சொர்க்கமது திறக்க <br />
வானவெளி வீதியில் நாமிருவர் மிதக்க <br />
நட்சத்திர சாரலில் பூமிதனை மறக்க</p>

<p>நெடுஞ்சாலை இரவுகள் நம் காதல் சொல்லுதே <br />
புலராத பொழுதுகள் நமை எழுப்பி செல்லுதே <br />
தனிமையின் இனிமையில் இருவுயிர் குளிருதே <br />
பனித்துளி ஒன்றிங்கே சூரியனை அணைத்ததே</p>

<p>உயிருள்ள சிற்பமாக உறையட்டும் இந்த நொடி! <br />
பூந்தென்றல் வாசமாக வீசட்டும் நம் காதல் நெடி! <br />
உயிரை வருடும் உணர்வினில் எல்லாம் <br />
உயிர்த்திருப்போம் அது போதுமடி!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 30 Oct 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/nedunjalai-iravugal-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[பூக்கள்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/pookal-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>பூக்கள் சிரித்து முத்தமிடும் <br />
பூக்கள் மெலிதாய் சத்தமிடும் <br />
பூக்கள் காதலில் உளரும் <br />
பூக்கள் மோதலில் அலறும்</p>

<p>பூக்கள் கொதித்து எரியும் <br />
பூக்கள் வெடித்து சிதறும் <br />
பூக்கள் சிவந்து குளிரும் <br />
பூக்கள் குளிர்ந்து மலரும்</p>

<p>பூக்கள் மீண்டும் சிரிக்கும்!</p>

<p>பூக்களின் சாயத்தை <br />
நடுசாமத்தில் வெளுத்தவளே <br />
காமத்தின் ஆழத்தை <br />
கண்மூடி காட்டியவளே!</p>

<p>நரம்பெல்லாம் புடைக்க <br />
தசையெல்லாம் இறுக்க <br />
உடம்புக்குள் வெடிக்க <br />
மூச்சங்கு அடைக்க <br />
உயிருக்குள் வலிக்க<br />
உதடுகள் சிரிக்க</p>

<p>நானறிந்த வித்தையின் <br />
நானறியா பக்கத்தில் <br />
நாம் எழுதிய ஓர் கவிதை <br />
நாளும் சொல்லும் நம் உறவை!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sat, 15 Oct 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/pookal-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[தேவதையே தேவதையே]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/thevathaiye-thevathaiye-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>வானவில்லில் கருவண்ணம் காணாமல் போனதென்ன <br />
என்னவளின் புருவங்கள் என்றுதான் ஆனதென்ன <br />
காதோரம் உன் மூச்சுக்காற்று சூடேற்றும் வேகமென்ன <br />
அணிதிரண்ட உன்பெண்மை அநியாயம் செய்வதென்ன</p>

<p>இதழோடு இதழ் சேர்த்து உணவை நான் ஊட்டுவேன் <br />
மடிமீது தலைசாய்த்து தினமும் தாலாட்டுவேன் <br />
நாவால் உன் மேனியில் ஓவியம் பல தீட்டுவேன் <br />
வள்ளுவனின் மூன்றாம் பாலை துளித்துளியாய் ஊற்றுவேன்</p>

<p>அணைத்தவுடன் எரியும் அதிசயம் உன் தேகமோ <br />
நினைத்தவுடன் உருகும் புதுசுகம் தான் மோகமோ <br />
என் காதல் நரம்புகளில் சிறுத்தையின் வேகமோ <br />
செங்காந்தள் பூச்சூடிய பெண்மேனி தாங்குமோ</p>

<p>பல கோடி மின்னல்கள் எனை வந்து தாக்குதடி <br />
உன்னுயிரில் நான் இணையும் அந்தவொரு நொடியிலே   <br />
சில நூறு ஜென்மங்கள் நான் வாழ்ந்து முடிக்கிறேன் <br />
மார்போடு நீ சிணுங்கும் நள்ளிரவு வேளையிலே</p>

<p>மன்மத வெள்ளம் உன்னிடம் செல்லும் <br />
உன்னத நேரம் நம் விழியோரம் <br />
மோகத்தின் பேய்மழை மூர்க்கமாய் பெய்தும் <br />
முடிக்கின்ற வேளையில் சாரலாய் காதல்</p>

<p>தேவதையே தேவதையே <br />
தேன் சுரக்கும் பூவிதழே <br />
உன் தாய் சுமந்த தேகமதை <br />
நான் சுமக்கும் காலம் எது?</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 07 Oct 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/thevathaiye-thevathaiye-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[நிலவோடு நான் பேசும் நேரம்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/nilavodu-naan-pesum-neram-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>நிலவோடு நான் பேசும் நேரம் <br />
காற்றில் உன் காதலின் ஈரம் <br />
பனி பொழியும் நள்ளிரவின் நீளம் <br />
கண் இமைக்கும் ஒருநொடியாய் மாறும்</p>

<p>நிலவும் முகிலும் இணையும் நேரம் <br />
உடலும் உயிரும் உனையே தேடும் <br />
குளிரும் இரவில், நிலவின் ஒளியில் <br />
காமன் மொழியில் காதல் சொல்வேன்</p>

<p>இரவினில் கடலினில், அலைதொடும் கரையினில் <br />
கார்மேக கூந்தலும் அசைந்தாடும் இசையினில் <br />
கடல் சூழ்ந்த தீவென, எனை சூழ்ந்தாய் ஒருமுறை <br />
சுழல் வீழ்ந்த மீனென, நான் வீழ்ந்தேன் முதல்முறை</p>

<p>மணலினில் மெத்தையும், மார்பினில் தத்தையும் <br />
பெண்தேவை தானுணர்ந்த கைவிரல் வித்தையும் <br />
நானறிந்து இசை மீட்ட, கொடியிடையில் தீ மூட்ட <br />
என்தோளில் முகம் புதைத்து பற்காவியம் நீ தீட்ட</p>

<p>கடற்கரை மணல்நமக்கு, உடையென உருமாற <br />
அச்சமும் கூச்சமும் எதிர்பதமாய் தடம்மாற <br />
வெட்கத்தில் வெண்ணிலா மேகத்தில் மறைந்தோட <br />
விண்மீன்கள் கூட்டமாய் நமைபார்த்து தலையாட்ட</p>

<p>கடலலை கால் தொட, உயிர் வரை நீ தொட <br />
சிகரங்கள் நான் தொட, சிறகுகள் வான் தொட <br />
இருவுயிர் இணைந்திட, இமைகளும் நனைந்திட <br />
இனிக்கின்ற ஒருகலையை இயல்பாக நாமறிந்தோம்!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 16 Sep 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/nilavodu-naan-pesum-neram-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[போகாதீங்க மாமா]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/pogatheenga-mama-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>பஞ்சு மெத்தை தலைகாணி <br />
பன்னீர் தெளிச்சு வச்சாலும் <br />
பாவிமக கண்ணுக்குள்ள <br />
தூக்கம் மட்டும் இல்ல மாமா</p>

<p>கண்ணுக்குள்ள நீயிருக்கன்னு <br />
கண்ணு முழிச்சி நான் கெடக்கேன் <br />
தனியா என்னை தவிக்க விட்டு <br />
தூரதேசம் போனதேன் மாமா</p>

<p>பொறையேறி விக்கும் போதும் <br />
கண்ணு கலங்கி நிக்கும் போதும் <br />
உள்ளுக்குள்ள சிரிப்பு மாமா   <br />
உன்னோட நெனைப்பு மாமா</p>

<p>மல்லிப்பூவு வாசம் உனக்கு <br />
மனசு பூரா புடிக்குமுன்னு <br />
குண்டுமல்லி பூவச்சூடி <br />
பூவப் போல இருக்கேன் மாமா</p>

<p>லவுக்கை இல்லா மாராப்பு <br />
மச்சான் உனக்கு புடிக்குமுன்னு <br />
கந்தாங்கி சீலை கட்டி <br />
கச்சிதமா இருக்கேன் மாமா</p>

<p>குட்டி குட்டி ஆசையெல்லாம் <br />
எட்டி எட்டி பாக்குது மாமா   <br />
எட்டு வாளி தண்ணி இறைச்சும் <br />
காய்ச்சல் மட்டும் போகல மாமா</p>

<p>நேந்துவிட்ட காளையெல்லாம் <br />
மீசை வளர்த்து சுத்துது மாமா   <br />
நீயில்லாத சாமத்துல <br />
வீட்டுக் கதவ தட்டுது மாமா</p>

<p>வாடாமல்லி வாடுமுன்ன <br />
வண்டி வச்சி வந்துடு மாமா   <br />
நெலாவும் பூமியும் உலாவுற வரைக்கும் <br />
என்னை விட்டு போகாதீங்க மாமா</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Tue, 13 Sep 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/pogatheenga-mama-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[அவள்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/aval-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>அணுவின் துகளை நெஞ்சில் வீசி <br />
அருகில் நின்று அழகாய் சிரித்தாள். <br />
ஆயிரம் எரிமலை என்னுள் வெடிக்க <br />
குளிரும் இரவில் கைகள் கோர்த்தாள்.</p>

<p>நானும் நானென அவளும் அவளென <br />
இருப்பது பிடித்தது - இருமுறை சொன்னாள். <br />
இரவும் பகலும் உன்னுடன் இருந்தும் <br />
எல்லை மீறா கண்ணியம் என்றாள்.</p>

<p>பெண்மையின் மென்மையை அறியாத ஆண்மை <br />
கேலிகள் செய்து கோபங்கள் தந்தாள். <br />
கோபத்தில் ஒருமுறை அறைந்திட வேண்டும் <br />
கன்னங்கள் காட்டி பலமுறை கேட்டாள்.</p>

<p>உறவுகள் மத்தியில் பேசிய பொய்கள் <br />
உன்னிடம் மட்டும் உண்மை என்றாள். <br />
உதடுகள் அதனை சொல்லும் முன்னே <br />
கண்ணில் சிறுதுளி நீருடன் நின்றாள்.</p>

<p>முழுவதும் உன்னை தெரிந்திட வேண்டும் <br />
கேள்வி கணைகள் ஆயிரம் தொடுத்தாள். <br />
இதுவரை நானும் அறிந்திரா உறவை <br />
உயிரில் ஊட்டி உணர்ந்திட சொன்னாள்.</p>

<p>அன்பாய் தோளில் சாய்ந்து கொண்டு <br />
மழலை மொழியில் கதைகள் சொன்னாள். <br />
தென்றல் கூந்தலை கலைக்கும் போது <br />
கிறங்கும் கண்ணில் ஒழுக்கம் தொலைத்தாள்.</p>

<p>தனியே இரவில் சிணுங்கும் நிலவை <br />
கவிதைகள் பாடி தூங்க வைத்தாள். <br />
சூரியன் வந்து உதிக்கும் போதும் <br />
இன்னும் கொஞ்சம் நேரம் என்றாள்.</p>

<p>உன்னுடன் இருக்கும் நேரம் யாவும் <br />
காலைப் பூவின் பனித்துளி என்றாள். <br />
தனியே நானும் தவிக்கும் தருணம் <br />
தீயில் இட்ட இறகுகள் என்றாள்.</p>

<p>யாருமற்ற சாலை முடிவில் <br />
மீண்டும் ஒருமுறை நடப்போம் என்றாள். <br />
பிரிவுகள் அற்ற உறவுகள் வேண்டும் <br />
பிரியும் நேரம் கண்ணால் சொன்னாள்.</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Tue, 30 Aug 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/aval-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[ஒரு கவிதையின் பயணம்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/oru-kavithaiyin-payanam-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>கம்பனும் தாமரையும் <br />
பயணித்த பாதை தான்! <br />
உன் மனமும் என் மனமும் <br />
ஒருமித்த பாதை தான்! <br />
நீ பேசும் பேச்சுக்கே <br />
பூ பூத்த பாதை தான்! <br />
செந்தமிழில் நீ பாட <br />
தேன் சுரக்கும் பாதை தான்!</p>

<p>மழைத்துளிக்கு காத்திருந்தேன் <br />
கவியருவி பொழிகின்றாய்! <br />
என் உயிர்வலியில் ஒரு துளியை <br />
உணர்வாக புனைவாயோ?</p>

<p>நிலமெல்லாம் நிலவாக <br />
நீ நடந்து செல்கின்றாய்! <br />
என் கனவெல்லாம் நனவாக <br />
கவியொன்றை சொல்வாயோ?</p>

<p>உலகில் உள்ள கவிகள் எல்லாம் <br />
ஒன்றாய் கூடி, நன்றாய் பாடி <br />
முயன்று பார்த்து தோற்று போயினர் <br />
உன் கண்கள் பேசிய கவிதைகள் கோடி!</p>

<p>நீயே கவிதைகள் பாடினால்?</p>

<p>நெடுவனங்கள் சருகாகி <br />
பூவனங்கள் ஆகுமடி <br />
கொடும்புலியும் பொன்மானும் <br />
காதல் சொல்லி திரியுமடி</p>

<p>இயற்கையை மாற்றாதே <br />
பூமி இங்கு தாங்காதடி <br />
காதல் ஒளி கூட்டாதே <br />
சூரியன் மட்டும் போதுமடி</p>

<p>ஊற்றெடுத்த முதல்கவியில் <br />
சிறகுகள் முளைக்குதடி! <br />
முற்றுப்புள்ளி வேண்டாமென <br />
இதயங்கள் துடிக்குதடி!</p>

<p>‐ கவி பாடும் என் தேவதைக்கு!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Thu, 18 Aug 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/oru-kavithaiyin-payanam-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[அழகு]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/azhagu-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>தமிழ் அழகா? <br />
தமிழ் பேசும் இதழ் அழகா?</p>

<p>இசை அழகா? <br />
இசை கொஞ்சும் சிரிப்பழகா?</p>

<p>இருள் அழகா? <br />
இருள் கவிழும் குழல் அழகா?</p>

<p>நிலவு அழகா? <br />
நிலவாய் குளிரும் முகம் அழகா?</p>

<p>மேகம் அழகா? <br />
மேகமாய் மிதக்கும் அவள் தேகம் அழகா?</p>

<p>இளமை அழகா? <br />
இளமையில் இவள் மட்டும் அழகா?</p>

<p>உண்மை அழகா? <br />
உண்மையை மறைக்கும் அவள் கண்மை அழகா?</p>

<p>பாவங்கள் அழகா? <br />
பாவங்கள் செய்யும் அவள் பார்வைகள் அழகா?</p>

<p>பருவங்கள் அழகா? <br />
பருவத்தில் பூரித்த துருவங்கள் அழகா?</p>

<p>மர்மங்கள் அழகா? <br />
மர்மமாய் இருக்கும் அவள் மச்சங்கள் அழகா?</p>

<p>முத்தங்கள் அழகா? <br />
முத்தங்கள் விட்டுச்செல்லும் எச்சங்கள் அழகா?</p>

<p>மோகங்கள் அழகா? <br />
மோகத்தில் எரியும் நம் தேகங்கள் அழகா?</p>

<p>தோல்விகள் அழகா? <br />
தோற்ற பின்னும் சிரிக்கும் வேள்விகள் அழகா?</p>

<p>காமங்கள் அழகா? <br />
காமம் தீர்ந்தும் வாழும் காதல்கள் அழகா?</p>

<p>காதல் அழகு! <br />
காதலும் காதலிக்கும் என் காதலி அழகு!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Mon, 15 Aug 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/azhagu-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[தொண்ணூறு வயசுல]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/thonnooru-vayasula-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>தொண்ணூறு வயசுல <br />
தடி ஊணி நடக்கறப்ப கூட <br />
அவ சிரிச்சா எனக்கு பிடிக்கணும் <br />
என் பாட்ட அவ ரசிக்கணும்</p>

<p>கையோட கை சேர்த்து <br />
மடி மேல தலை சாய்ச்சி <br />
அவ கண்ண பாக்கறப்ப <br />
முப்பது வயசுல மொளைச்ச காதல் <br />
முடியாத வயசுலயும் முத்தமா பூக்கணும்</p>

<p>காமம் முழுசும் கரைஞ்சி போய் <br />
காதல் மட்டும் மிச்சம் இருக்குற <br />
அந்த ஒத்த முத்தத்துல <br />
ஒரு கோடி கவிதைகள் அவளுக்காக <br />
நான் பாடணும்</p>

<p>சுருக்கம் விழுந்த கையால <br />
இறுக்கமா அவளை புடிச்சி <br />
நெருக்கமா பக்கம் வந்தாலும் <br />
வெட்கத்துல அவ விலகி போகணும்</p>

<p>ஓரக்கண்ணால அவ வெட்கத்த <br />
ஓராயிரம் முறை ரசிச்சிட்டு <br />
அந்த காதோர மச்சத்துக்கு <br />
கம்பனா நான் மாறனும்</p>

<p>கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் <br />
முட்டிட்டு நிக்கற கடலையும் வானத்தையும் <br />
உள்ளங்கையில் அவளை வச்சி <br />
உயர பறந்து தாண்ட வேணும்</p>

<p>பேரன் பேத்தி எடுத்த வயசுல <br />
கிழவனும் கிழவியும் கொஞ்சறத பாரு-னு <br />
ஊரு உலகம் எல்லாம் கேலி செய்ய <br />
உற்சாகமா காதல் செய்யணும்</p>

<p>கால் வலி-னு ஒரு நாள் <br />
அவ என் காலடியில உக்காந்தா <br />
தோள் வலி-னு கூட பாக்காம <br />
குழந்தையா அவளை சுமக்கனும்</p>

<p>பேரக் குழந்தைங்க ஆளான பொறவும் <br />
என் மாரு மேல தான் அவ தூங்கணும் <br />
காலம் முடிஞ்சி போனதை கூட <br />
தெரியாம தான் நாங்க போகணும்</p>

<p>உசுருக்குள்ள உசுர வச்சி, எமனையும் ஏமாத்தி <br />
ஒத்த பாசக்கயிரு-ல ரெண்டு உசுரும் பிரியணும் <br />
ஒரே சமாதியில ஒண்ணா ஒருக்களிச்சி படுக்கணும் <br />
மண்ணா மக்குன பொறவும் கூட, ஒண்ணா பூமியில் கலந்திருக்கணும்</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Tue, 09 Aug 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/thonnooru-vayasula-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[பிரிவுணர்த்திய தேவதைக்கு]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/pirivunarithiya-devathaiku-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>உலகத்தின் மறுபக்கம் நீ இருந்தாலும் <br />
உன் இதயத்தின் ஒருப்பக்கம் நான் இருப்பேனே   <br />
கடல்கள் பல நீ கடந்து சென்றாலும் <br />
கனவினில் இருவரும் கலந்திருப்போமே</p>

<p>காணும் பெண்ணெல்லாம் உன் போல தோன்ற <br />
காண்பவை நிஜமாக நான் அங்கு வேண்ட <br />
கண்ணில் பிழையோ, காட்சிப் பிழையோ <br />
கண்மணி உன்னால் காதல் மழையோ</p>

<p>இரவின் தனிமையை நினைவுகள் வதைக்க <br />
இமைகள் இணைந்தாலும் நீயங்கு இனிக்க <br />
கைப்பிடித்த நினைவுகள் கனவினில் மிதக்க <br />
கண் பனித்த துளிகள் தலையணை நனைக்க</p>

<p>சேலைகளை அழகாக்கும் <br />
நந்தவனச் சோலையே   <br />
செந்தமிழ்நாட்டில் எனை விட்டு <br />
சென்றதென்ன மேலையிலே</p>

<p>கவிதைத் தாயின் மடியிலே <br />
கண்ணன் தேடிய பூங்குழலே <br />
புன்னகை பூத்து உனை வெல்ல <br />
பூக்களும் இல்லை பூமியிலே</p>

<p>உன் தேகம் வீசும் வியர்வை வாசம்   <br />
உன் கண்கள் கனிவுடன் பேசும் நேசம்   <br />
என் ஊனுடன் உயிர் கலந்திருக்கும் வரை <br />
ஒவ்வொரு நொடியும் தேடும் உன் ஸ்பரிசம்</p>

<p>நட்புடன் சிரித்து, மகிழ்ந்த பொழுதுகள் <br />
கவலையை பகிர்ந்து, நெகிழ்ந்த நிமிடங்கள் <br />
ஒரு துளி ரகசியம் ஏதுமின்றி <br />
மனதை இருவரும் திறந்த தருணங்கள்</p>

<p>மீண்டும் வேண்டும் கண்மணியே</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Thu, 28 Jul 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/pirivunarithiya-devathaiku-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[மீண்டும் ஒரு மின்னல்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/meendum-oru-minnal-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>உயிரின் உணர்வை தமிழில் கலந்து <br />
வலியை மறந்து, இதயம் கடந்து <br />
பறக்க துடித்தது சிறகற்ற பறவை <br />
கவிதையில் புதைத்தது, தன் பெயரற்ற உறவை.</p>

<p>என் ரணத்திற்கு மருந்தாகிய கவிதைகள் <br />
உன் மனதிற்கு விருந்தாகிய தருணங்கள் <br />
கவிதைகளை காதலிக்கும் <br />
காதலின் புதுக்கவிதையே</p>

<p>முடிவுரைக்கு பின் முன்னுரையா? <br />
கல்லறையில் பூத்த மல்லிகையா? <br />
இறந்து போனது நான் இல்லையா? - மீண்டும் <br />
பிறக்க வைத்தது நீ இல்லையா?</p>

<p>சிரித்து பேசி, சிறைகள் உடைத்தாய் <br />
சிமிட்டும் விழியில், இதயம் துளைத்தாய் <br />
கவிஞன் மனதில் கனவுகள் விதைத்தாய் <br />
கவிதைகள் பாடி, சிறகுகள் கொடுத்தாய்.</p>

<p>இரவின் மடியில் வெள்ளி முளைப்பதும் <br />
காதல் விழியில் கவிதை பிறப்பதும் <br />
ஆதாம் ஏவாள் அறிந்த செய்தி <br />
விளங்க வைத்தாய் என்னுயிரில் ஓதி.</p>

<p>மலர்கள் பேசும் மொழிகள் கேட்டு <br />
மயக்கும் குயிலின் ராகம் போட்டு <br />
உனக்கு சொல்வேன் தமிழில் பாட்டு <br />
உயிரில் வெடிக்கும் காதல் வேட்டு.</p>

<p>சிட்டுக்குருவியின் இறகுகள் தேடி <br />
செய்து வைப்பேன் மஞ்சங்கள் கோடி <br />
விடிய விடிய கவிதைகள் பாடி <br />
என் இரவுகள் கூறும் நன்றிகள் கோடி.</p>

<p>‐ கவிதைகளில் உயிர்த்திருக்கும் என் ரசிகைக்கு சமர்ப்பணம்.</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Tue, 12 Jul 2011 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/meendum-oru-minnal-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[மணக்க போகும் பெண்ணுக்கு]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/manaka-pogum-pennuku-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>பௌர்ணமி நிலவில் <br />
பனி விழும் இரவில் <br />
படித்துறை மணலில் <br />
பாட்டொன்று படித்தேன்</p>

<p>மணக்க போகும் பெண்ணுக்கு <br />
மயங்க வைக்கும் கண்ணுக்கு <br />
மழலை மொழி சொல்லுக்கு <br />
மண வாழ்த்தொன்று வடித்தேன்</p>

<p>தேவதையை மணமுடிக்க <br />
தெருவெல்லாம் வெடி வெடிக்க <br />
தொலைதூர நிலவாக <br />
திரிசங்கு ஒலியாக</p>

<p>திருமகன் அங்கு வருவானடி <br />
திருமகள் உன்னை மணப்பானடி</p>

<p>கணநேர கள்வனாகி <br />
காதோரம் முத்தமும் <br />
கால்கொலுசு ஓசையில் <br />
காதலின் மொத்தமும்</p>

<p>கணவன் வந்து தருவானடி <br />
காதல் சொல்லி திரிவானடி</p>

<p>இருவிழி இமைகளும் <br />
இணைந்தே இமைப்பதும் <br />
இருவரும் ஒன்றாக <br />
இருதயம் துடிப்பதும்</p>

<p>இயற்கை கொடுத்த சந்தமடி <br />
இருமனம் இணையும் சொந்தமடி</p>

<p>கோல் ஊன்றும் வயதிலும் <br />
தோள் தாங்கும் விழுதாக <br />
கல்லறை சேரும் வரையிலும் <br />
உனக்கு மட்டும் முழுதாக</p>

<p>மணவாளன் இருப்பானடி - உன்<br />
மனம்போல நடப்பானடி</p>

<p>கண்ணீரை
கண்கள் மறந்து போகட்டும் <br />
புன்னகை மட்டுமே பூத்து நிற்கட்டும் <br />
இல்லறத்திற்கு இலக்கணம் இவர்கள் தானென்று <br />
இமயமும் குனிந்து வாழ்த்துக்கள் சொல்லட்டும்</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 26 Sep 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/manaka-pogum-pennuku-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[தாயும் நீயும்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/thaayum-neeyum-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>தனித்திருந்தும், அன்பில் திளைத்திருந்தேன் <br />
என் தாயின் கருவறையில் <br />
வலித்திருந்தும், வெளியே சிரித்திருந்தேன் <br />
உன் காதல் முடிவுரையில்</p>

<p>தாயும் புறந்தள்ளினாள் <br />
நீயும் புறந்தள்ளினாய் <br />
எலும்புகள் விரியும் ஒலியும் <br />
காதலை பிரியும் வலியும்</p>

<p>ஒன்றென அறிவேன் கண்மணியே</p>

<p>தொப்புள்கொடி அறுத்தாலும் <br />
சொந்தம் விட்டு போவதில்லை <br />
காதலை நீ மறுத்தாலும் <br />
உன்னை நான் பிரிவதில்லை</p>

<p>உயிரை கொடுத்த அன்னையும் <br />
உணர்வை கொடுத்த உன்னையும் <br />
காலம் முழுதும் மறவேனடி   <br />
நெஞ்சில் வைத்து மகிழ்வேனடி</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 19 Sep 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/thaayum-neeyum-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[கனவோடு கலைபவளே]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/kanavodu-kalaibavale-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>என் மார்பில் படுத்து நீ உறங்க <br />
உன் கூந்தல் கோதி நான் கிறங்க <br />
என் விரல்கள் உன்மேல் பயணம் செல்ல <br />
வெட்கி சிவந்து எனை நீ கொல்ல</p>

<p>காமன் சூத்திரம் முழுதும் விளங்க <br />
நிலைகள் அறுபதில் உயிரும் கலங்க <br />
உச்ச மோகத்தில் உடல்கள் நடுங்க <br />
காமம் தணிந்தும், காதல் ததும்ப</p>

<p>நம் அணைப்பின் இறுக்கத்தில் இரவுகள் கழிய <br />
விண்மீன்கள் நம்மேல் பனியாய் பொழிய <br />
இரவின் முடிவில் என் கனவுகள் கருக <br />
காலைப்பனியாய் நான் தனிமையில் உருக</p>

<p>நம் கனவுப்பூக்கள் ஒவ்வொன்றும் <br />
என் கண்ணீர்த்துளியில் நனைகின்றது <br />
நீ இல்லையென்பதை அறியாமல் <br />
மீண்டும் மீண்டும் பூக்கின்றது</p>

<p>கனவோடு கலைபவளே, <br />
என் நிஜத்தோடு கலப்பாயோ?</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Thu, 09 Sep 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/kanavodu-kalaibavale-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[பொறு மனமே]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/poru-maname-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>வெள்ளி மழையில் தங்கச்சிலை <br />
யாரை நினைத்து நீராடுதோ? <br />
நனைத்த துளிகள் மோட்சம் பெற்று <br />
பூமி பந்தை சூடாக்குதோ?</p>

<p>காதல் வேள்வி செய்யும் பெண்ணின் <br />
இதழும் தேன்துளி சுரக்குதோ? <br />
பொன்வண்டை தேடித் தேடி - இந்த <br />
பூவும் உறக்கம் தொலைத்ததோ?</p>

<p>பருவம் வந்தால் பூப்பூக்கும் <br />
சாய்ந்து உறங்க துணை கேட்கும் <br />
வாடும் போதும் வாசந்தரும் <br />
பூங்கொடியும் நீயும் ஒன்றல்லவோ</p>

<p>முக்கனியில் ஒன்றாய் இருந்தாலும் <br />
கனிந்தபின் தான் கிளி வருமே   <br />
காதல் கூடும் வேளை வரும் <br />
அதுவரை கொஞ்சம் பொறு மனமே</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 05 Sep 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/poru-maname-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[தூங்க மறந்த நேரத்தில்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/thoonga-marantha-nerathil-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>கவிதை பூக்களால் ஒரு தோட்டம் <br />
பொய்த்த வானமாய் உன் பிரிவு <br />
காத்திருக்கும் பூமியாய் என் கண்கள் <br />
தூரத்து மேகமாய் உன் சிரிப்பு</p>

<p>கொட்டி செல்லும் மழையால் <br />
மேகம் ஒன்றும் குறைவதில்லை <br />
இதழில் பட்ட ஒரு துளியை <br />
பூக்கள் என்றும் மறப்பதில்லை</p>

<p>ஒரு முறை சிரித்துவிட்டு போ</p>

<p>காதல் பூக்கள் மலர்வது <br />
காமன் காலடி செல்லத்தான் <br />
காலில் மிதித்து பூக்களை <br />
கல்லறைக்கு அனுப்பாதே</p>

<p>காதல் வசப்படும்   <br />
காதல் வசப்படும்  <br />
காதல் வசப்படும்</p>

<p>புலம்பும் மனது</p>

<p>என்ன சொல்லி தூங்க வைப்பேன்?</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 22 Aug 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/thoonga-marantha-nerathil-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[மதுரைக்கு போறேனடி]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/maduraiku-porenadi-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>மதுரைக்கு போறேனடி - என் <br />
மாமன்கிட்ட பொண்ணு கேட்க <br />
அம்மன் கோயில் சாட்சியோட <br />
சீதனமா உன்னை கேட்க</p>

<p>ஆயிரங்கால் மண்டபமும் <br />
சாயுங்கால சூரியனும் <br />
வீசுகின்ற தென்றலோடு <br />
பேசுகின்ற மல்லிகையும் <br />
வாழ்கின்ற மதுரையில <br />
வாழ்ந்து வந்த தேவதையை <br />
கொண்டு போக வரம் கேட்பேன் <br />
உங்கப்பன்கிட்ட தினம் கேட்பேன்</p>

<p>தூங்காத இரவுகளும் <br />
பொங்கி வரும் கனவுகளும் <br />
பேசாத வார்த்தைகளும் <br />
புரியாத அர்த்தங்களும் <br />
கேட்காமலே கொடுத்தவ நீ <br />
கொடுத்தவளை கேட்க போகிறேன்</p>

<p>நீ போட்ட கோலம் போல <br />
பூப்போட்ட தாவணியில் <br />
அழகழகா சிரிச்சிக்கிட்டு <br />
என் உசுர பறிச்சிக்கிட்டு <br />
நீ பண்ண கொடுமையெல்லாம் <br />
சொல்லப் போகிறேன் உங்கப்பன்கிட்ட</p>

<p>ஜல்லிக்கட்டு காளையை போல் <br />
துள்ளிக்கிட்டு திரிஞ்சாலும் <br />
கண்ணுக்குட்டி உன்னை விட்டு <br />
தள்ளி தள்ளி நிக்குறது <br />
மாமன் சொல்லும் சொல்லுக்காக   <br />
தமிழ்மதுரை மண்ணுக்காக</p>

<p>பஞ்சுக்குள்ள நெருப்ப வச்சி <br />
பத்திரமா பாத்தாலும் <br />
பத்திக்கிட்டு போகுமின்னு <br />
பக்குவமா சொல்ல போறேன்</p>

<p>நெஞ்சுக்குள்ள ஓடி வந்து <br />
கொஞ்சி விட்டு போனவள <br />
சொந்தம் பேச வர போறேன் <br />
சொந்தக்காரன் ஆகப் போறேன்</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Thu, 20 May 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/maduraiku-porenadi-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[நீ. நான். நாம்.]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/nee-naan-naam-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>உன்வலியை நானறிந்து <br />
தன்வலியாய் தானுணர்ந்து <br />
என்னுயிரில் நீ கலந்து <br />
நாம் எழுதிய கவியன்றோ?</p>

<p>நீயின்றி நானின்றி <br />
நாமாகி கலந்தபின் <br />
ஊனின்றி உயிரின்றி <br />
நம் காதல் வாழுமன்றோ</p>

<p>குலமென்றும் மதமென்றும் <br />
சுற்றமும் சூழும் சனமென்றும் <br />
பழங்கதைகள் பலக்கேட்டு <br />
நின்றிடுமோ நம் காதல்</p>

<p>பாடிப்பறந்த பறவையின் <br />
சிறகொடித்ததோ நம் காதல் <br />
ஓடித்திரிந்த மான்குட்டியின் <br />
கால் முறித்ததோ நம் காதல்</p>

<p>பட்டுபுழு பட்டாம்பூச்சியாகும் போது <br />
வலிகள் எல்லாம் பறந்திடுமே   <br />
கணவன் மார்பில் சாய்ந்துறங்கும் போது <br />
ஆயிரம் சிறகுகள் முளைத்திடுமே</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Tue, 27 Apr 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/nee-naan-naam-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[கருணைக்கொலை]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/karunai-kolai-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>இறந்தே பிறந்த <br />
குழந்தையை போல் <br />
முடிந்தே தொடங்கியது <br />
என் காதல்</p>

<p>காதலின் மறுப்பும் <br />
குழந்தையின் இழப்பும் <br />
வாழ்நாள் முழுதும் <br />
தொடரும் நினைப்பும்</p>

<p>புயலென வந்தாய் <br />
வேருடன் சாய்த்தாய் <br />
துளிர்க்கும் நினைப்புடன் <br />
உயிருடன் நான்</p>

<p>மீனின் கண்ணீர் <br />
கடலுக்கு தெரியுமா <br />
ஆணின் கண்ணீர் <br />
மனதுக்கு புரியுமா?</p>

<p>உயிரை பறித்தால் <br />
சிரிப்புடன் மரிப்பேன் <br />
நட்பை பறித்தால் <br />
நான் என்ன செய்வேன்?</p>

<p>அருவியின் உச்சியில் பரிசலாய் <br />
சரியும் பனியில் சிறுமுயலாய் <br />
எரியும் குடிசையில் குருடனாய் <br />
சிங்கள தேசத்தில் தமிழனாய் <br />
நான்</p>

<p>எதிர்மறை எண்ணங்கள் <br />
மனதினில் வந்ததில்லை <br />
அவை தவிர இப்போது <br />
வேறொன்றும் தோன்றவில்லை</p>

<p>சித்தம் கலங்கி <br />
முற்றும் குழம்பி <br />
தெருவினில் அலையுமுன் <br />
கொன்றுவிடுங்கள் என்னை</p>

<p>கருணைக்கொலை புண்ணியம்</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 25 Apr 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/karunai-kolai-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[விண்ணைத்தாண்டி வருவாயா - திரைவிமர்சனம்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/vinnai-thandi-varuvaaya-thirai-vimarsanam/]]></link>
				<description><![CDATA[<p>கள்வனை காட்டிய கைகள் <br />
காதலை தழுவுகின்றன <br />
கௌதம் மேனன்-ன் <br />
விண்ணைத்தாண்டி வருவாயா</p>

<p>என் காதல் கொடுத்த கவிதைகளை <br />
பறித்துச் சென்றது உன் படம்   <br />
தூக்கம் வறண்ட விழிகளை <br />
நனைத்து சென்றது உன் படம்</p>

<p>நீரில் கண்கள் நீந்தும் போதும் <br />
சிரிக்க வைத்தது உன் படம்   <br />
என் வாழ்வின் இனிய நிமிடங்களை <br />
மீண்டும் தந்தது உன் படம்</p>

<p>தாமரையின் கவிதைகள் - பாடல்களில் <br />
மேனன்-ன் கவிதைகள் - திரைக்கதையில் <br />
ரகுமானின் கவிதைகள் - பின்னனி இசையில் <br />
மனோஜ்-ன் கவிதைகள் - ஒளியாடலில்</p>

<p>மிரளாத காளையை போல் <br />
அலட்டாமல் சிம்பு   <br />
தெவிட்டாத தேனை போல் <br />
தித்திப்பாக திரிஷா</p>

<p>கணேஷ் - அளவாய் பேசி <br />
அளவில்லாமல் சிரிக்க வைக்கிறார் <br />
ரவிக்குமார் - அதிகமாய் பேசி <br />
இவர் அவசியமா, என கேட்கிறார் :)</p>

<p>ஆட்டுக்குட்டி-கும் அன்பை போதித்த <br />
தேவன் ஆலயத்தில் <br />
திரைக்கதையின் துவக்கம் <br />
காதலின் நடுக்கம்</p>

<p>புயலே வந்தாலும் <br />
புன்னகைக்கும் கார்த்திக்   <br />
குழம்பிய குளத்தில் <br />
நிலவை தேடும் ஜெஸ்ஸி</p>

<p>முடியாமல் காதல் உரைத்த போதும் <br />
நட்பென்று கூறி மறைத்த போதும் <br />
ரயில் பயணத்தில் உடைந்த போதும் <br />
அழகாய் மலரும் காதல்</p>

<p>மெல்லினத்தின் ஊடே வல்லினம் போல் <br />
காதலின் ஊடே சண்டை காட்சிகள்   <br />
சுயத்தை இழக்காத காதலன் <br />
சண்டையிலும் சுகமாய் இனிக்கிறான்</p>

<p>காதலுக்காக திருமணத்தை நிறுத்தியவள் <br />
காதலுக்காக காதலை துறப்பதா? <br />
நொடிப்பொழுதில் எடுக்கும் முடிவு தான் காதலா? <br />
முடிவு வரை வாழும் ஒவ்வொரு நொடியும் காதலா?</p>

<p>குழம்பி தான் போகிறேன்</p>

<p>“இந்த உலகத்துல எவ்ளவோ பொண்ணுங்க இருந்தும், <br />
நான் ஏன் ஜெஸ்ஸி-எ லவ் பண்ணேன்?”</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 14 Mar 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/vinnai-thandi-varuvaaya-thirai-vimarsanam/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[வெள்ளந்தி சிரிப்பும், பாவாடை நெனைப்பும்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/vellanthi-sirippum-pavadai-nenaipum-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>மத்தியான வேலையில <br />
வயக்காட்டு மேடையில <br />
பூவாடை வீசயில <br />
பாவாடை நெனப்புத்தான்</p>

<p>ஒத்தையடி பாதையில <br />
ஒத்தையா நீ போகையில <br />
உன்னோட வந்ததெல்லாம் <br />
என்னோட உசுரு தான்</p>

<p>கொலுசு போட்ட பாதத்துல <br />
நெருஞ்சி முள்ளு குத்தையில <br />
உனக்கு முன்ன துடிச்சதெல்லாம் <br />
என்னோட மனசு தான்</p>

<p>வெள்ளாவி வெளுக்கையிலே <br />
வெள்ளை சோறு பொங்கையில <br />
வளந்த பருத்தி வெடிக்கையிலே <br />
பளிச்சின்னு உன் மொகம் தான்</p>

<p>ஏரெடுத்து உழுகையில <br />
எருமைக்கண்ணு மேய்க்கையில <br />
ஏரிக்கரையில் குளிக்கையிலே <br />
என் சோடி நெனைப்பு தான்</p>

<p>நெலா காயும் ராத்திரி <br />
வெளிச்சந்தரும் பூத்திரி <br />
வாடை காத்தில் ஆடுதடி <br />
உடம்பெல்லாம் வேகுதடி</p>

<p>கருகமணி போட்ட புள்ள <br />
உதட்டோரம் செவந்த புள்ள <br />
என் உசுர பிரிச்சி எடுத்த <br />
காரணந்தான் என்ன புள்ள?</p>

<p>காஞ்சமரம் பூத்திருக்கு <br />
கொத்துக்கொத்தா காய்ச்சிருக்கு <br />
சோடிகிளிக்கு தெரியலையா <br />
பக்கம் வர புடிக்கலையா</p>

<p>ஒத்தச்சொல்லு சொன்னியே <br />
நிக்கவச்சி கொன்னியே <br />
மண்ணத் தள்ளி பொதச்சாலும் <br />
மனசுக்குள்ள நின்னியே</p>

<p>குருவி காக்கா கோழி கூட <br />
நெனைச்ச உடனே கூடுதடி <br />
பாழா போன மனுசனுக்கு <br />
சாதி சனம் தடுக்குதடி</p>

<p>கம்மாக்கரை ஓரத்துல <br />
சாயுங்கால நேரத்துல <br />
கண்ணு ரெண்டும் ஈரத்துல <br />
என் குருவி தூரத்துல</p>

<p>ஒத்தையில நின்னாலும் <br />
சாதி சனம் கொன்னாலும் <br />
என் உசுரு உனக்காக <br />
சத்தியமா வரும் புள்ள</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 12 Mar 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/vellanthi-sirippum-pavadai-nenaipum-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[கவிதைகளும் கவுண்டமணியும்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/kavithaigalum-goundamaniyum/]]></link>
				<description><![CDATA[<p>நிலவுக்கு ஏன் வெட்கம்? <br />
தென்னை ஓலையில் ஒளிகிறதே <br />
ஓ! உன்னை பார்த்ததாலா?</p>

<p><em>(டேய்… அது வெட்கம் இல்ல… கப்பு… இவளுங்க எல்லாம் என்னைக்கு-டா குளிச்சிருக்காங்க?)</em></p>

<hr />

<p>நான் எண்ணும் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை <br />
உன் கண்ணின் மணியை பார்த்த பிறகு!</p>

<p><em>(ஓ… சென்ட்ரல் ஜெயில்-ல கூரைய எடுத்துடாங்களா?… களி தின்னாலும் கவிதை போகல உனக்கு… அட்ரா அட்ரா)</em></p>

<hr />

<p>வெயிலில் நான் <br />
வெளியே செல்வதில்லை <br />
கண்ணுக்குள் வாழும் உனக்கு <br />
வேர்க்கும் என்று!</p>

<p><em>(செந்தில்: அண்ணே, நான் கண்ண மூடிட்டு செய்யுற வேலைய… நீங்க கண்ண தொறந்துட்டு செய்வீங்களா அண்ணே?)</em></p>

<hr />

<p>கங்கையே! <br />
நீ மோட்சமடையும் நாளின்று <br />
என்னவள் குளிக்க வருகிறாள்!</p>

<p><em>(அப்பாடா… கடைசியில குளிக்கணும் முடிவு பண்ணிட்டாளா?… உலகம் பொழைச்சதுடா சாமி!)</em></p>

<hr />

<p>சிப்பியின்றி முத்துக்கள் <br />
உருவாகுதே! <br />
என்னவள் குளித்த துளிகள்!</p>

<p><em>(ஆமாண்டா…குளிச்ச தண்ணி, பல்லு துலக்குன பிரஷு, பிஞ்சி போன செருப்பு… எல்லாத்தையும் வச்சி மியுசியம் கட்டுங்க)</em></p>

<hr />

<p>முல்லை பூக்களின் <br />
கூட்டம் கண்டேன் <br />
உன் சிரிப்பில்!</p>

<p><em>(ஆத்தா… நீ சிரிக்காத ஆத்தா… புள்ள பயப்படுது… கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்கு)</em></p>

<hr />

<p>என் தரிசு நிலங்கள், பூ பூக்குதே <br />
ஒரு துளி மழை இல்லாமல்! <br />
ஒ! உன் பார்வை பட்டதாலோ?</p>

<p><em>(அப்படியே அம்மணிய, மதுர பக்கம், திருநெல்வேலி பக்கம் கொஞ்சம் பாக்க சொல்லுங்க… தண்ணி இல்லியாம்)</em></p>

<hr />

<p>திரியின்றி, நெய்யின்றி <br />
அகலாக எரிவேன்! <br />
இரவிலும் உன்னை பார்க்க</p>

<p><em>(செந்தில்: அண்ணே, இதுல எப்டினே லைட் எரியும்… விளையாடாதீங்கண்ணே)</em></p>

<hr />

<p>உதடுகளால் ஆடுகிறேன் கபடி <br />
மூச்சு விடாமல் <br />
என் தலையணை பஞ்சாகிறது!</p>

<p><em>(டேய்… நீ எந்த நேரத்துக்கு எந்த டைப்பா முழிய மாத்துவேனு எனக்கு தெரியும்… கிளம்பு… கிளம்பு)</em></p>

<hr />

<p>கோடி கோடியாய் பணம் <br />
செலவழிக்க முடியாமல் மனம் <br />
நகை விரும்பாத நங்கையாய் <br />
நீ</p>

<p><em>(30 ரூபா குடுத்தா, 3 நாளைக்கு கண்ணு முழிச்சி வேலை பாக்குற மொன்ன நாயிக்கு… பேச்சை பாரு)</em></p>

<hr />

<p>கேளுங்கள் கொடுக்கப்படும் <br />
தட்டுங்கள் திறக்கப்படும்! <br />
உன் மதம் சொன்ன வார்த்தைகள் <br />
கேட்டதுண்டோ தோழி ?</p>

<p><em>(டேய் அதெல்லாம் பழசு, புது ஸ்டைலு… மம்மி… டாடி…)</em></p>

<hr />

<p>தமிழ் - வற்றாத ஜீவ நதி <br />
யார் சொன்னது? <br />
என்னவளை பாட <br />
வார்த்தைகள் போதவில்லை!</p>

<p><em>(செந்தில்: அண்ணே, நீங்க பத்தாவது பெயில் அண்ணே… நான் எட்டாவது பாஸ் அண்ணே)</em></p>

<hr />

<p>சொல்லும் பொருளே <br />
சொல்லை சொன்னால் <br />
சொல்லும் வார்த்தை <br />
நெஞ்சில் ஏறுமோ?</p>

<p><em>(அய்யய்யா… கல்ல கண்டா, நாய காணோம்… நாய கண்டா, கல்ல காணோம்… மவனே நேர்-ல வாடி நீ)</em></p>

<hr />

<p>முதற்கணம் மண்ணிலும் <br />
மறுகணம் விண்ணிலும் <br />
இயற்கையே குழம்பியதே <br />
உனை பார்த்த அக்கணம்!</p>

<p><em>(நெப்போலியன்-ம், ஓல்டு மாங்க்க்கும் சேத்து அடிச்சா அப்படி தான் இருக்கும்… தண்ணி சேத்துகடா-னா கேக்குறியா?)</em></p>

<hr />

<p>ஒரு நொடியில் <br />
உன் பார்வையில் <br />
ஓராயிரம் கவிதைகள்!</p>

<p><em>(நாராயணா… இந்த கொசு தொல்லை தாங்க முடியல… மருந்தடிச்சி கொல்லுங்கடா)</em></p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Thu, 04 Mar 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/kavithaigalum-goundamaniyum/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[ஏனடி அழைத்தாய்?]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/yenadi-azhaithai-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>ஏனடி அழைத்தாய்?<br />
எனை ஏனடி அழைத்தாய்?</p>

<p>என் கவிதை தடாகத்தில்<br />
அழகாய் பூத்திருந்தேன்<br />
உன் பிம்பம் விழுமென<br />
நீராய் காத்திருந்தேன்</p>

<p>கல்லெறிந்து போகிறாய்<br />
கல் நெஞ்சக்காரியோ?<br />
தெறித்த துளிகளும்<br />
முத்துக்களாய் உனக்காக</p>

<p>ஏனடி அழைத்தாய்?<br />
எனை ஏனடி அழைத்தாய்?</p>

<p>கார்மேகம் சூழ்ந்ததென<br />
நெடுவனம் தான் வருந்துமோ?<br />
பூந்தென்றல் வீசுதென<br />
பூக்களும் தான் புலம்புமோ?</p>

<p>காதலன் கொஞ்சுகையில்<br />
காதல்மனம் கெஞ்சுமோ?<br />
இயற்கையின் விதி புரியாதோ?<br />
காதலின் சதி தெரியாதோ?</p>

<p>ஏனடி அழைத்தாய்?<br />
எனை ஏனடி அழைத்தாய்?</p>

<p>தொட்டியில் இருக்கும் மீன் நான்<br />
கையில் எடுத்து கொஞ்சுகிறாய்<br />
சுவாசமின்றி வாழும் கலையை<br />
எனக்கு கற்று கொடுக்கிறாய்</p>

<p>துடிக்கும் போது இனிக்கும்<br />
இனிக்கும் போது வலிக்கும்<br />
வலிக்கும் போது சிரிக்கும்<br />
விந்தையை நீ அறிவாயோ?</p>

<p>இல்லையென்று கேட்பதற்கு<br />
இல்லாமலே போகலாம்<br />
இதற்காகவா அழைத்தாய்?<br />
எனை இதற்காகவா அழைத்தாய்?</p>

<p>ஆழ பதிந்து விட்டாய்<br />
இனி மீள முடியாது<br />
எனை இரண்டாய் பிளந்தாலும்<br />
உன் நினைவு அகலாது</p>

<p>ஏனடி அழைத்தாய்?<br />
எனை ஏனடி அழைத்தாய்?</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Mon, 01 Mar 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/yenadi-azhaithai-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[பார்க்க வேண்டும் ஒரு முறை]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/parka-vendum-oru-murai-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>அந்த நீல நிற மேலாடை <br />
இன்னும் வைத்திருக்கிறாயா?</p>

<p>நான் காதலுரைத்த போது <br />
உன் இதயதுடிப்பை பதிவு செய்ததே? <br />
முதன் முதலாய் நீ பொய்யுரைத்த போது <br />
மௌனமாய் சாட்சியளித்ததே?</p>

<p>பிரித்து விட்ட கூந்தல் <br />
பார்க்க மறுத்த கண்கள் <br />
வார்த்தை மறந்த உதடுகள் <br />
கண்ணீரை தடுத்த இமைகள்</p>

<p>அனைத்தும் என் கண்ணுக்குள் <br />
நெருப்பாய் என் நெஞ்சுக்குள்</p>

<p>எப்படி இருக்கிறாய் நீ? <br />
பார்க்க வேண்டும் ஒரு முறை</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 28 Feb 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/parka-vendum-oru-murai-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[என் பெயர். உன் குரல்.]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/en-peyar-un-kural-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>கோடி முறை கேட்டிருப்பேன் <br />
என் பெயரை <br />
இன்று மட்டும் இனிக்குதே</p>

<p>புன்னகை பூக்கும் பூவிதழில் <br />
என் பெயரும் பூத்ததே</p>

<p>இன்னொரு முறை சொல்லாதே <br />
எறும்புகள் என்னை மொய்க்கின்றன</p>

<p>அவள் உஷ்ணத்தை உணராமல் <br />
குழலை நுகராமல் <br />
இதழை வருடாமல் <br />
செவிக்கு மட்டும் அதிர்ஷ்டம்</p>

<p>தொலைபேசி ஒழியட்டும்   <br />
அறிவியல் அழியட்டும்</p>

<p>யுகம் யுகமாய் காத்திருந்து <br />
பிறந்தது மனித இனம் <br />
தினம் தினமாய் காத்திருந்து <br />
கேட்கிறது என் மனம்</p>

<p>என்னாகுமோ</p>

<p>மறுக்கும் சொல்லில் உன் காதல் <br />
மறுக்க முடியாமல் தவிக்குதே   <br />
இனிக்க கேட்ட உன் குரல் <br />
மீண்டும் மீண்டும் ஒலிக்குதே</p>

<p>கவிக்கு சொந்தக்காரி <br />
கவிதையை படித்ததால் <br />
கவிஞன் மனதில் <br />
இன்னொரு கவிதை</p>

<p>நேற்றைய கவிதை தகித்தது <br />
இன்றைய கவிதை இனிக்குது <br />
நாளைக்கும் கவிதை பூக்குமோ ? <br />
கவியின் குரல் உனக்கு கேட்குமோ ?</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sat, 27 Feb 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/en-peyar-un-kural-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[மீண்டும் நீ வேண்டும் நண்பா]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/meendum-nee-vendum-nanba-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>உயிரை உருக்கும் கலை <br />
பெண்களுக்கென்று நினைத்திருந்தேன் <br />
தவறென்று நிரூபித்தாய்</p>

<p>என்னை முற்றிலும் அறிந்தவர்கள் <br />
முடிவு வரை இருப்பார்கள் என்றிருந்தேன் <br />
தவறென்று நிரூபித்தாய்</p>

<p>காலங்கள் காயங்கள் ஆற்றும் <br />
மாதங்கள் மனதை மாற்றும் என்றிருந்தேன் <br />
தவறென்று நிரூபித்தாய்</p>

<p>நீ பேச மறுத்த இரவுகள் <br />
உன் பாசத்தை பேசுகின்றன <br />
நீ சிரிக்க மறந்த நிமிடங்கள் <br />
என் வாழ்நாளில் குறைந்தன</p>

<p>எனக்காக ஓடி வருகிறாய் <br />
மௌனத்தால் கொன்று செல்கிறாய் <br />
வருவதால் உனை அழைப்பதா? <br />
கொல்வதால் உனை தடுப்பதா?</p>

<p>நான் செய்ததென்ன?</p>

<p>நட்பின் கொலையா? <br />
உண்மையின் விலையா? <br />
அரிச்சந்திரனுக்கு வந்தது <br />
என்னுடைய நிலையா?</p>

<p>இல்லாத காயங்கள் ஆற முடியாது <br />
சொல்லாத சோகங்கள் தீர முடியாது <br />
நட்பை மறுக்கும் காரணம் தெரியும் <br />
உன் ஊகம் தவறு, எப்போது புரியும்?</p>

<p>மீண்டும் நீ வேண்டும் <br />
மீண்டு வர வேண்டும்</p>

<p>காத்திருக்கிறேன்  <br />
நட்புடன் <br />
நட்புக்காக</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 26 Feb 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/meendum-nee-vendum-nanba-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[தேசபற்று]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/desapatru-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>என் தாயின் கருவறையில்<br />
கோடுகள் கிழித்து ரணமாக்கிவிட்டு<br />
பெயர் வைத்தார்கள்<br />
தேசபற்று</p>

<p>பெற்ற குழந்தை பசியில் அழும்போதும்<br />
காவல் நாய்க்கு சோற்றை வைக்கும் கடமை<br />
தேசபற்று</p>

<p>மொத்தமும் நமக்காக இருக்கும்போது<br />
மிச்சதுக்காக அடித்துக்கொள்ளும் அவலம்<br />
தேசபற்று</p>

<p>ஒன்றாய் இருந்தோம் கருவறையில்<br />
கிழித்து பிறந்தோம் விடுதலையில்<br />
தாயின் இரத்தம் கணக்கில் இல்லை<br />
பிள்ளைகளின் யுத்தம் முடியவில்லை</p>

<p>ஆயுதங்களாய் அழியும் செல்வத்தில்<br />
பூமியில் சொர்க்கங்கள் படைக்கலாம்<br />
குருதி சிந்தும் யுத்தங்களை<br />
அன்பு சிந்தும் முத்தங்களாக்கலாம்</p>

<p>இரத்தம் தோய்ந்த எல்லைகோடுகளில்<br />
பூக்காடுகள் வளர்ப்போம்  <br />
துப்பாக்கி சுமக்கும் இயந்திரங்களை<br />
மனிதர்கள் ஆக்குவோம்</p>

<p>தேசங்களை துறப்போம், நேசங்களை வளர்ப்போம்<br />
எல்லைகளை மறப்போம், விண்ணுலகில் பறப்போம்<br />
புதிய உலகம் உருவாக, பிரளயங்கள் தேவையில்லை<br />
தேசங்கள் தாண்டி காதல் செய்வோம்</p>

<p>நான் தமிழனல்ல<br />
நான் இந்தியனல்ல<br />
பட்டங்களை துறந்து<br />
பாடி திரியும் பறவை நான்</p>

<p>என்னோடு வாருங்கள்</p>

<p>பறந்து திரியலாம்<br />
சிரித்து மகிழலாம்<br />
ஆனந்தமாய் வாழலாம்<br />
நிம்மதியாய் இறக்கலாம்</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Wed, 24 Feb 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/desapatru-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[நீ]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/nee-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>என் இரவினில் கவிதைகள்<br />
பகலினில் கனவுகள்<br />
இரண்டிலும் அழகாய்<br />
நீ</p>

<p>என் படுக்கையில் முட்கள்<br />
தலையணை முத்தம்<br />
முரட்டுத்தனமான மென்மை<br />
நீ</p>

<p>சாரல் மழைக்கு ஏங்கும்<br />
துளி பட்டவுடன் சுருங்கும்<br />
தொட்டால்சினுங்கி<br />
நீ</p>

<p>என் தரிசு நிலம் பூக்கின்றது<br />
ஒரு துளி மழை இல்லாமல்<br />
பறக்கும் பட்டாம்பூச்சியாய்<br />
நீ</p>

<p>உயிர் கொடுத்த தாய்மை<br />
உயிரை வாங்கும் காதல்<br />
இருதலைகொள்ளி எறும்பாய்<br />
நீ</p>

<p>கண்டும் காணாதிருக்க<br />
பார்த்தும் பேசாதிருக்க முயல்கிறாய்<br />
நடிக்கத் தெரியாத நங்கை<br />
நீ</p>

<p>காதலை அறியாதவன்<br />
காவியம் படைக்கிறேன்<br />
நான் பிரம்மனாகிய காரணம்<br />
நீ</p>

<p>கல்லில்லாமல் உளியில்லாமல்<br />
சிற்பமொன்று வடிக்கிறேன்<br />
என்னுள் பதிந்த ஓவியம்<br />
நீ</p>

<p>என் கவிதையின் காரணம்<br />
காரணத்தின் பூரணம்<br />
இரண்டுமே ஒன்றாய்<br />
நீ</p>

<p>காலையில் நீ<br />
மாலையில் நீ<br />
கண்ணுறங்கா துயரில் நீ<br />
கண்கொள்ளா கனவில் நீ</p>

<p>என் வசந்த காலமும் நீ<br />
என் இலையுதிர் காலமும் நீ<br />
கோடையில் இளநீர் நீ<br />
குளிரில் தேநீர் நீ</p>

<p>குழந்தையின் சிரிப்பில் நீ<br />
அன்னையின் அணைப்பில் நீ<br />
ஏழையின் சந்தோஷம் நீ<br />
பிரிவின் துயரம் நீ</p>

<p>உனக்குள் நான்?</p>

<p>என்னை அழவைத்த கேள்வியும் நீ<br />
கேள்வியின் பதிலும் நீ</p>

<p>வா</p>

<p>காதலின் உச்சத்தை<br />
காமத்தின் எச்சத்தை<br />
நம்முடைய மிச்சத்தை<br />
உணரலாம்!</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 19 Feb 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/nee-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[எப்படி சொல்வேன் உனக்கு?]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/eppadi-solven-unaku-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>ஏன்? எதற்கு? எப்படி?<br />
இவற்றை மீறி<br />
எந்த கருத்தும் என் கருத்துடன் ஒன்றியதில்லை<br />
காதல் எப்படி நுழைந்தது?<br />
விடை தெரியவில்லையே, நீ கேட்டபோது<br />
என் மனம் புரியவில்லையோ? நான் விழித்த போது</p>

<p>எப்படி சொல்வேன் உனக்கு?</p>

<p>கள்ளமில்லா பிள்ளை சிரிப்பில்<br />
உள்ளம் கொள்ளை போனதடி<br />
வெட்டி பேசும் வெள்ளை பேச்சில்<br />
என் கர்வம் தோற்று போனதடி<br />
சிரிக்கும் உன் கன்னக் குழியில்<br />
என் வீரம் மடிந்து போனதடி<br />
இனிக்கும் உன் வளை ஓசையில்<br />
என் இதயம் நின்று போனதடி</p>

<p>எப்படி சொல்வேன் உனக்கு?</p>

<p>அறிவின் சிகரமல்ல நீ<br />
அழகின் உச்சமல்ல நீ<br />
கவி பாடும் குயில் அல்ல நீ<br />
தமிழ் போற்றும் குறளல்ல நீ<br />
பிறகேன் நீ?<br />
தெரியவில்லை</p>

<p>எப்படி சொல்வேன் உனக்கு?</p>

<p>சொல்லி மறுத்திருந்தால், கொன்றிருப்பேன் இதயத்தை<br />
சொல்லாமல் மறுத்ததால், தேடுகின்றேன் காதலை<br />
காத்திருந்தேன் இருபத்தேழு வருடங்கள்<br />
காத்திருப்பேன் எழுநூறு ஜென்மங்கள்</p>

<p>எப்படி சொல்வேன் உனக்கு?</p>

<p>ஜாதியும் மதமும் காரணமா?<br />
நான் ஆதாம்<br />
நீ ஏவாள்<br />
ஜாதி மதத்திற்கு மூத்தவர்கள் நாம்</p>

<p>எப்படி சொல்வேன் உனக்கு?</p>

<p>மனதில் காதலுடன், இதழில் நட்புடன்<br />
பழக என்னால் முடியவில்லை<br />
சொல்லாமல் இருந்திருந்தால்<br />
தினமென் செவிக்குள் உன் சிரிப்பொலி<br />
சொல்லி முடித்ததால்<br />
தனிமையில் என் கவி ஒலி</p>

<p>எப்படி சொல்வேன் உனக்கு?</p>

<p>நானும் கோவலன் தான்<br />
கண்ணகி உனை காணும் வரை<br />
மனம் அறிந்திருக்கவில்லை<br />
தேவதையை காண்பேன் என்று</p>

<p>எப்படி சொல்வேன் உனக்கு?</p>

<p>என் பூமி அழகானது<br />
நண்பர்கள் அதிகமானார்கள்<br />
சொந்தங்கள் இனித்தது<br />
ஆனால், மனதின் ஓரமொரு வெற்றிடம்</p>

<p>எப்படி சொல்வேன் உனக்கு?</p>

<p>நாம் வீசி விளையாடிய பனிக்கட்டிகள் சொல்லட்டும்<br />
நாம் ஏறி களைத்த மலைகள் சொல்லட்டும்<br />
உனக்கு மிகவும் பிடித்த பயணங்கள் சொல்லட்டும்  <br />
எதிரும் புதிருமாய் இருந்த தருணங்கள் சொல்லட்டும்</p>

<p>அதிகாலை பனித்துளிகள் உரக்க சொல்லட்டும்<br />
உன் முகம் காட்டும் கண்ணாடி இனிக்க சொல்லட்டும் <br />
கர்வமழிந்து உன் கூந்தலேறும் ரோஜாக்கள் சொல்லட்டும்<br />
என் மனதை திருடிய உன் வளையல்கள் சொல்லட்டும்</p>

<p>பறந்து திரியும் சிட்டுக்குருவிகள் சொல்லட்டும்<br />
நீ கொஞ்சி விளையாடும் நாய்குட்டி சொல்லட்டும்<br />
உன் மனதை திருடிய வெண்ணிலா சொல்லட்டும்<br />
காதணியாக தவமிருக்கும் நட்சத்திரங்கள் சொல்லட்டும்</p>

<p>என் காதலை</p>

<p>நான் எப்படி சொல்வேன் உனக்கு<br />
என் காதலை?</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Wed, 17 Feb 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/eppadi-solven-unaku-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[இது தான் காதலா?]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/ithu-than-kadhala-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>புகைத்ததுண்டு, புகைப்படத்துடன் பேசியதில்லை<br />
நகைத்ததுண்டு, நடுவீதியில் தனியாக இல்லை<br />
நடித்ததுண்டு, நட்பினிடத்தில் என்றுமில்லை<br />
வெடித்ததுண்டு, வெட்டுப்பட்டு வந்ததில்லை</p>

<p>சிந்திக்காமல் சிரித்ததுண்டு<br />
சிரித்துக்கொண்டே அழுததில்லை<br />
பேசிக்கொண்டே இருந்ததுண்டு<br />
மௌனமொழி விளித்ததில்லை<br />
விழித்துக்கொண்டே உறங்கியதுண்டு<br />
உறங்கமுடியாமல் விழித்ததில்லை<br />
பார்க்காமல் பழகியதுண்டு<br />
பழகியபின் தவிர்த்ததில்லை</p>

<p>இது தான் காதலா?</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 14 Feb 2010 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/ithu-than-kadhala-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[வைதேகிக்காக ஒரு tanglish கவிதை]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/oru-tanglish-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>May மாதத்தில் ஒரு<br />
Moon பிறந்தது!<br />
வைதேகி பிறந்தநாள் - மே 3.</p>

<p>(இன்றிரவு நண்பர்களுடன் கதைத்து கொண்டிருந்த போது, மனதில் உதித்தது)</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Tue, 14 Apr 2009 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/oru-tanglish-kavithai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[வெண்ணிலா கபடி குழு - திரைவிமர்சனம்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/vennila-kabadi-kuzhu-thirai-vimarsanam/]]></link>
				<description><![CDATA[<p>நான் பொதுவாக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை. என் முதல் விமர்சனம் இது.</p>

<p>“பருத்திவீரன்” படத்துக்கு பிறகு, ஒரு நல்ல மண் வாசனையுள்ள படம் பார்த்த சந்தோஷம். எல்லாமே பிடிச்சிருந்தது.
படம் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரு இயல்பான விறுவிறுப்பு இருந்தது.</p>

<p>பழனி பக்கத்துல இருக்குற கனகம்பட்டி கிராமத்துல நடக்குற கதை இது. உன்ன மாதிரி, என்ன மாதிரி, ஏழு பேரோட கதை தன் இந்த படம்…
ஒரு போட்டியில கூட ஜெயிக்காத ஒரு கபடி குழு…. வெளியூர் போய் தோத்துட்டு, உள்ளூர்ல மானம் போக கூடாதுன்னு ஒரு மொக்க கபடி குழு-வ
ஊர் திருவிழாவுக்கு கூப்புடறது இருந்து படம் சூடு புடிக்க ஆரம்பிக்குது. மொத்த கதையும் நான் இங்க சொல்லிட்டா, நீங்க படம் பாக்குறப்ப ஒரு
விறுவிறுப்பு இருக்காது…அதனால நீங்க தியேட்டரில் போய் பாருங்க ;)</p>

<p>மொத்த படத்துலயும், எனக்கு ரொம்ப புடிச்சது நம்ம கதாநாயகி தான். அவ்ளோ அழகு.. இன்னும் மனசுக்குள்ளயே நிக்குறா.
பேரு சரண்யா மோகன். இந்த படத்துல அவளோட பேர் என்னான்னு சொல்ல மாட்டாங்க..அது தேவையும் இல்ல. படத்தோட ஆரம்பத்துல வருவா…
அப்பறமா கடைசியில வருவா… பெருசா நடிக்க ஒன்னும் வாய்ப்பு இல்ல… ஆனா குடுத்த வேலைய சரியா செய்திருக்கா…</p>

<p>அப்பறம் நம்ம கோச் நடிப்பு பிரமாதம். ரொம்ப நல்லா இருக்கு … கிஷோருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. படத்தோட பின்னணி இசை நல்லா இருந்தது…
எல்லா பாட்டுமே அருமையா இருக்கு… ரொம்ப நாளைக்கு கேட்டுகிட்டே இருக்கலாம்… இசை அமைப்பாளர், செல்வகணேஷ்…. தமிழுக்கு இன்னும் ஒருத்தர் …
இன்னும் நிறைய எதிர்பாக்கறோம் கணேஷ்…. பின்னுங்க … சரியா…</p>

<p>படத்துலயே நான் ரொம்ப நேரம் விழுந்து விழுந்து சிரிச்சது, அந்த பரோட்டா காமெடி தான் … இப்ப நெனைச்சாலும் சிரிப்பு வருது…</p>

<p>படத்தோட முடிவு பத்தி நிறைய சர்ச்சைகள்… ஆனா, எனக்கு படத்தோட முடிவு இயல்பா தெரியுது … நீங்களே பாத்துட்டு முடிவு பண்ணுங்க…</p>

<p>பி.கு.: www.onlycinema.com - நான் இங்க தான் படம் பாத்தேன்.</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 15 Mar 2009 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/vennila-kabadi-kuzhu-thirai-vimarsanam/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[உன் வெற்றிடம்]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/blog/un-vetridam-kavithai/]]></link>
				<description><![CDATA[<p>பல நூறு நண்பர்கள் மத்தியிலும்<br />
தனிமையை உணர்கின்றேன்<br />
நீ இல்லாமல்!</p>

<p>(அந்தோணி US சென்றபின் முதல் நாள் நள்ளிரவில் எழுதியது)</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 06 Mar 2009 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/blog/un-vetridam-kavithai/</guid>
			</item>
		
	</channel>
</rss>
