கனவோடு கலைபவளே

09 Sep 2010

என் மார்பில் படுத்து நீ உறங்க
உன் கூந்தல் கோதி நான் கிறங்க
என் விரல்கள் உன்மேல் பயணம் செல்ல
வெட்கி சிவந்து எனை நீ கொல்ல

காமன் சூத்திரம் முழுதும் விளங்க
நிலைகள் அறுபதில் உயிரும் கலங்க
உச்ச மோகத்தில் உடல்கள் நடுங்க
காமம் தணிந்தும், காதல் ததும்ப

நம் அணைப்பின் இறுக்கத்தில் இரவுகள் கழிய
விண்மீன்கள் நம்மேல் பனியாய் பொழிய
இரவின் முடிவில் என் கனவுகள் கருக
காலைப்பனியாய் நான் தனிமையில் உருக

நம் கனவுப்பூக்கள் ஒவ்வொன்றும்
என் கண்ணீர்த்துளியில் நனைகின்றது
நீ இல்லையென்பதை அறியாமல்
மீண்டும் மீண்டும் பூக்கின்றது

கனவோடு கலைபவளே,
என் நிஜத்தோடு கலப்பாயோ?


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach

copyleft @ 2009.