பேரன்பும் பெருங்கோபமும்
பிரேம்குமார் மாசிலாமணி


மீண்டும் மலர்ந்தது

11 Dec 2013

முன்னிரவு நேரம்
சில்லென்ற மழைச்சாரல்
மெலிதான மண்வாசனை
மௌனமான மரங்கள்
மஞ்சள் உமிழும் விளக்குகள்

யாருமற்ற சாலையொன்றில்
இருவருக்காய் ஒரு தேநீர் கடை

இதமான தேநீருடன்
சுகமாக கதைகள் பேச

தினம் பார்த்த பூமுகம்
புதிதாக பார்வை வீச

மிதமான குளிரிரவில்
மெதுவாக மெதுவாக

மீண்டும் மலர்ந்தது
மறந்துவிட்ட நம் காதல்!


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.