பேரன்பும் பெருங்கோபமும்
பிரேம்குமார் மாசிலாமணி


பாரியின் தேர்

07 Aug 2025

காவி நிறத்தவளே
கண் தூங்க மறுத்தவளே
என் மேனி அளந்தவளே
மெய்யாக இருந்தவளே

போதும் போதுமென்றேன்
போகாத எல்லை சென்றாய்
மீண்டும் வாழ்வோமென்றேன்
மனமறுத்து சிறுத்து நின்றாய்

காலங்கடந்தும் காதலென்றேன்
தாபங்கழிந்தால் போதுமென்றாய்
கோபம் மிகுந்த நேரமொன்றில்
கூடுகழிந்து பறந்துசென்றாய்

வாழாத வாழ்விதற்கா
வாகாயென் வாசல் வந்தாய்?
சேராமல் போவதற்கா
தீராத காதலென்றாய்?

புயலழித்த மரத்தடியில்
கூடுதேடும் ஒருகுருவி
வேயெரித்த செங்கதிரில்
நிழல்தேடும் சிறுபுரவி

நான்…

பாரியின் தேர்!


பொருள் விளக்கம்:


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.