பேரன்பும் பெருங்கோபமும்
பிரேம்குமார் மாசிலாமணி
22 Aug 2010
கவிதை பூக்களால் ஒரு தோட்டம்
பொய்த்த வானமாய் உன் பிரிவு
காத்திருக்கும் பூமியாய் என் கண்கள்
தூரத்து மேகமாய் உன் சிரிப்பு
கொட்டி செல்லும் மழையால்
மேகம் ஒன்றும் குறைவதில்லை
இதழில் பட்ட ஒரு துளியை
பூக்கள் என்றும் மறப்பதில்லை
ஒரு முறை சிரித்துவிட்டு போ
காதல் பூக்கள் மலர்வது
காமன் காலடி செல்லத்தான்
காலில் மிதித்து பூக்களை
கல்லறைக்கு அனுப்பாதே
காதல் வசப்படும்
காதல் வசப்படும்
காதல் வசப்படும்
புலம்பும் மனது
என்ன சொல்லி தூங்க வைப்பேன்?
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்: