சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


எழுதாத வரிகள்

01 Aug 2025

எனக்கே புரியாத என்னை
என்னைவிட புரிந்தவள் அவள்
புரிந்தபின்னும் பிரிவோமென்று
பிரியும்போதும் புரியவில்லை

சத்தங்களின் அமைதியில்
மௌனங்களின் கதறலில்
கண்டுகொண்டேன் அவளை
கலங்கின கண்களுடே

வார்த்தைகளுடன் போரிட்டு
தோற்றப்பின்தான் தெரிந்தது
மௌனங்கள் போதும்
உனதன்பைச் சொல்ல

ஊரறியும் ராவண நேசம்
யாரறிவார் மாதவி பாசம்?
மணல்வீடென்றறிந்தும்
தென்றலுடன் காதல் !


பொருள் விளக்கம்:


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.