சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி
14 Feb 2010
புகைத்ததுண்டு, புகைப்படத்துடன் பேசியதில்லை
நகைத்ததுண்டு, நடுவீதியில் தனியாக இல்லை
நடித்ததுண்டு, நட்பினிடத்தில் என்றுமில்லை
வெடித்ததுண்டு, வெட்டுப்பட்டு வந்ததில்லை
சிந்திக்காமல் சிரித்ததுண்டு
சிரித்துக்கொண்டே அழுததில்லை
பேசிக்கொண்டே இருந்ததுண்டு
மௌனமொழி விளித்ததில்லை
விழித்துக்கொண்டே உறங்கியதுண்டு
உறங்கமுடியாமல் விழித்ததில்லை
பார்க்காமல் பழகியதுண்டு
பழகியபின் தவிர்த்ததில்லை
இது தான் காதலா?
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்: