முன்னிரவு நேரம்
சில்லென்ற மழைச்சாரல்
மெலிதான மண்வாசனை
மௌனமான மரங்கள்
மஞ்சள் உமிழும் விளக்குகள்
யாருமற்ற சாலையொன்றில்
இருவருக்காய் ஒரு தேநீர் கடை
இதமான தேநீருடன்
சுகமாக கதைகள் பேச
தினம் பார்த்த பூமுகம்
புதிதாக பார்வை வீச
மிதமான குளிரிரவில்
மெதுவாக மெதுவாக
மீண்டும் மலர்ந்தது
மறந்துவிட்ட நம் காதல்!
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: