உயிரை உருக்கும் கலை
பெண்களுக்கென்று நினைத்திருந்தேன்
தவறென்று நிரூபித்தாய்
என்னை முற்றிலும் அறிந்தவர்கள்
முடிவு வரை இருப்பார்கள் என்றிருந்தேன்
தவறென்று நிரூபித்தாய்
காலங்கள் காயங்கள் ஆற்றும்
மாதங்கள் மனதை மாற்றும் என்றிருந்தேன்
தவறென்று நிரூபித்தாய்
நீ பேச மறுத்த இரவுகள்
உன் பாசத்தை பேசுகின்றன
நீ சிரிக்க மறந்த நிமிடங்கள்
என் வாழ்நாளில் குறைந்தன
எனக்காக ஓடி வருகிறாய்
மௌனத்தால் கொன்று செல்கிறாய்
வருவதால் உனை அழைப்பதா?
கொல்வதால் உனை தடுப்பதா?
நான் செய்ததென்ன?
நட்பின் கொலையா?
உண்மையின் விலையா?
அரிச்சந்திரனுக்கு வந்தது
என்னுடைய நிலையா?
இல்லாத காயங்கள் ஆற முடியாது
சொல்லாத சோகங்கள் தீர முடியாது!
நட்பை மறுக்கும் காரணம் தெரியும்
உன் ஊகம் தவறு - எப்போது புரியும்?
மீண்டும் நீ வேண்டும்
மீண்டு வர வேண்டும்
காத்திருக்கிறேன்
நட்புடன் நட்புக்காக!
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: