இக்காட்டிடை பெருவெள்ளத்தில்
கரையூறும் நத்தைக்கூட்டின்
சலனமில்லா பெருங்கூச்சலும்,
இம்மானிட பெருங்காட்டில்
தனிக்குருட்டு செடியின்
முடிவடையா வெற்றிடமும்,
நீரறியா பெரும்பாலையில்
மழைவேண்டும் சிறுவிதையின்
நிறைவேறா நெடுந்தாகமும்,
கருவறையின் நிலவறையில்
கண்திறவா காலமெல்லாம்
செங்கதிரால் தீராயிரவும்
என் மனமெங்கும் தினமுழல
வலிக்கிறது…
நான் தாய்
நான் குழந்தை
என்னை நானே பிரசவிக்கிறேன்!
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: