அந்த நீல நிற மேலாடை
இன்னும் வைத்திருக்கிறாயா?
நான் காதலுரைத்த போது
உன் இதயதுடிப்பை பதிவு செய்ததே?
முதன் முதலாய் நீ பொய்யுரைத்த போது
மௌனமாய் சாட்சியளித்ததே?
பிரித்து விட்ட கூந்தல்
பார்க்க மறுத்த கண்கள்
வார்த்தை மறந்த உதடுகள்
கண்ணீரை தடுத்த இமைகள்
அனைத்தும் என் கண்ணுக்குள்
நெருப்பாய் என் நெஞ்சுக்குள்
எப்படி இருக்கிறாய் நீ?
பார்க்க வேண்டும் ஒரு முறை
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: