இனங்கண்டு உறவாடி
குலங்கெடுக்க புறம்பேசும்
மதிகெட்ட மானிடருள் - எனை
நலங்கெட எறிந்ததேன்?
சொல்லடி சிவசக்தி!
மெய்வருடும் உறவுகளில்
பொய்யொழுகும் உறவுகளை
பகலிரவாய் பகுத்தறிய - என்
நுதலதின் ஒளியெங்கே?
சொல்லடி சிவசக்தி!
நெல்லென நினைத்த
புல்லினப் பிழைக்கு
மழையென்ன செய்யும்?
தீதென்றறிந்தும்
திளைத்ததிலுழலும்
மனமெங்கு உய்யும்?
சொல்லடி சிவசக்தி!
முகப்பு > வலைப்பதிவுகள்இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: