சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


நானுறங்க வேணுமடி

11 Sep 2026

காமமுமிழும் இதழ்களினூடே
காதலூறிய கண்களைதேடும்
கோவலன் கூடிய மாதவியே
கோகிலமில்லா குந்தவையே

பேதலித்த பேதையின்
பேதலிக்கா காமம்போல்
வேரறுத்த வீதியில்
வேண்டிநிற்கும் வாதையே

எதற்கென்னை விற்றாய்?
கீழடிப் பெண்ணே !

கவியுணரா காவியமாய்
பொட்டழகே ஓவியமாய்
கடல்தாண்டி வந்ததென
கைநழுவி போனதென்ன

பிரிவுகளே உறவுகளாய்
உருக்கொண்டு உருக்க
தனிமை மட்டும் தாயாக
தன்னிலையில் இருக்க

மலையருவி மார்பினிலே
தலைசாய்க்க தோனுதடி
தேனுறங்கும் பூவுக்குள்ளே
நானுறங்க வேணுமடி…

நானுறங்க வேணுமடி !


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.